ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
தமிழ் சினிமாவில் இப்போது பரபரப்பாக பிஸியாக இருக்கும் ஒரே நடிகர் விஷால் என்றே சொல்லலாம். ஒரு படம் முடிவதற்குள்ளாகவே அடுத்த படத்தை ஒப்பந்தம் செய்து கொண்டு வருகிறார். 'ஆம்பள' படம் முடிவடைவதற்கு முன்பாகவே 'பாயும் புலி' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். 'பாயும் புலி' படம் முடிவதற்குள்ளாகவே பாண்டிராஜ் இயக்கும் படத்தை ஒப்பந்தம் செய்தார். இப்போது இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பாகவே அடுத்து 'கொம்பன்' படத்தை இயக்கிய முத்தையா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்கிறார்கள். கூடவே, லிங்குசாமி இயக்க உள்ள 'சண்டக்கோழி 2' படமும் நீண்ட நாட்களாக பட்டியலில் உள்ளது.
'பாயும் புலி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் முடிவடைந்தது. இப்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் நேற்று முதல் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார். இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக 'மெட்ராஸ்' படத்தில் நடித்த கேத்தரின் தெரேசா நடிக்க உள்ளார். விஷாலைப் போலவே பாண்டிராஜும் அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'இது நம்ம ஆளு' படத்தை இரண்டு பாடல்கள் இல்லாமல் முடித்துக் கொடுத்த பாண்டிராஜ், குழந்தைகளை வைத்து இயக்கியுள்ள 'ஹைக்கூ' படத்தையும் முடித்துவிட்டார். இந்த இரண்டு படங்களும் வெளியீட்டிற்காக காத்துள்ளன. அதற்குள் விஷால் நடிக்கும் படத்தை இயக்க ஆரம்பித்து விட்டார் பாண்டிராஜ். இரண்டு பரபரப்பான ஆட்கள் இயக்கும் படம் சீக்கிரமே முடிந்து விடும் போலிருக்கிறதே...