இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சல்மான் கானும், கரீனாகபூரும் நடித்துள்ள பஜ்ரங்கி பைஜான் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 17 அன்று உலகம் முழுக்க வெளியாகிறது. இப்படத்தின் முதல்நாள் வசூல் நிச்சயமாக ரூ.35 கோடியைத் தாண்டும் என்றும், ஒரு வார வசூல் ரூ.125 கோடியைத் தாண்டும் என்றும் பாலிவுட்டில் ஜோதிடம் சொல்லி வருகின்றனர் பாலிவுட் பண்டிதர்கள். தமிழ்நாட்டிலும் இந்தப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. எனவே பஜ்ரங்கி பைஜான் படம் தமிழ்நாட்டில் ரூ.2 கோடி முதல் ரூ. 50 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில்தான் பஜ்ரங்கி பைஜான் படத்துக்கு ரெட் போடப்பட்டுள்ளது. காரணம் லிங்கா விவகாரம்தான்.
பஜ்ரங்கி பைஜான் படத்தை சல்மான்கான் உடன் இணைந்து லிங்கா படத்தின் தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருக்கிறார். லிங்காவில் சம்மந்தப்பட்ட ஈராஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறது. பஜ்ரங்கி பைஜான் படத்தில் லிங்கா படத்தில் சம்மந்தப்பட்ட இரண்டு நிறுவனங்கள் இருப்பதால் இதுதான் தக்க தருணம் என்று பஜ்ரங்கி பைஜான் படத்துக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் ரெட் போட உள்ளனர். லிங்கா விநியோகஸ்தர்களுக்கு சேர வேண்டிய பணம் இன்னும் வழங்கப்படவில்லை. தவிர எம்.ஜி. என்கிற மினிமம் கேரண்டி அடிப்படையில் படத்தைத் திரையிட்டவர்களுக்கும் இழப்பீடு கொடுக்க வேண்டுமாம். இந்த காரணங்களினால்தான் சல்மான் படத்துக்கு ரெட் போட்டுள்ளனர்.