ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'ஈ' படத்தை தொடர்ந்து ஜீவாவும், நயன்தாராவும் பல வருடங்களுக்குப் பிறகு தற்போது இணைந்து நடித்த வரும் படம் 'திருநாள்'. 'அம்பாசமுத்திரம் அம்பானி' படத்தை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் இயக்கி வரும் இப்படத்தில் ஜீவா ரௌடியாக நடிக்கிறார். கும்பகோணத்தை கதைக்களமாக வைத்து எடுக்கப்படும் திருநாள் படத்தில் ப்ரீகே.ஜி. குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் டீச்சாராக நடிக்கிறார் நயன்தாரா. அஜித் நடித்த ஏகன் படத்தில் ஏற்கனவே நயன்தாரா டீச்சராக நடித்திருக்கிறார்.
அந்தப் படத்தில் படு கிளாமராக உடை அணிந்து டீச்சர்களையே இழிவுபடுத்தினார். திருநாள் படத்திலோ புடவை கட்டி ஹோம்லியாக... சுருக்கமாக சொல்வதென்றால் நல்ல டீச்சராக நடிக்கிறாராம். தமிழில்முதன் முதலாக நயன்தாரா நடித்த படம் 'ஐயா'. அந்தப் படத்தில் முழுக்க முழுக்க ஹோம்லியான கேரக்டரில் நடித்தார்.