ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாம் ஆசை ஆசையாய் செய்யும் காரியத்தில் ஏமாற்றம் அடைவதை 'பல்பு' என்று குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது. காதலின் தோல்வியை அந்தக் காலத்தில் பசங்க கவிதையில் மறந்தனர்... இப்பொழுது பசங்க, ஏமாத்துன பொண்ணுங்கள கவிதையா திட்டி பாட்டா பாடுறாங்க. காதலியிடம் ஏமாந்து 'பல்பு' வாங்கிய காதலன் பாடும் பாடல் ஒன்றை கைனடோஸ்கோப் நிறுவனத்தின் சார்பில் டாக்டர்.எஸ்.செல்வமுத்து மற்றும் மஞ்சுநாத் ஆகியோர் வீடியோ ஆல்பமாக தயாரிக்கிறார்கள். மஸ்தான்-காதர் இசையில் 'எங்கடி போன நீ ஏமாத்தி போன நீ' என்ற ஒற்றை பாடலை அபிஷேக் - பிரசாந்த் பாடியுள்ளனர்.
பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் கணேஷ் பிரசாத், வாகை சூடவா இனியா ஆகியோர் இந்தப் பாடலுக்கு உரியக் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். கண்கவரும் உடை அலங்காரத்தில் இனியா மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இந்த பாடலில் தோன்றுகிறார்.
இப்பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார் பி. சிவராக் சங்கர். ஹரி ஆர்ஜே ராஜன் - கார்த்திக் முனியாண்டி ஒளிப்பதிவில், அரவிந்த் படத்தொகுப்பில் 'பல்பு சாங்' என்ற ஒற்றை பாடல் வீடியோ ஆல்பத்தை எழுதி இயக்கியிருக்கிறார் AR பரத் குமார். 'பல்பு சாங்' ஆல்பத்தை பல்வேறு திரை இசை பாடல்களை வெளியிட்டு வரும் புகழ் பெற்ற சரிகமா நிறுவனம் வெளியிடுகிறது. பல்பு சாங் இனி மேல் இதைப் போன்றப்பாடல்கள் மேலும் வெளி வர உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'பல்பு சாங்' பற்றி சரிகமா தலைமை நிறுவன அதிகாரி ஆனந்த் கூறுகையில் “ 'பல்பு சாங்' துள்ளல் இசை, கண்கவர் படக் காட்சிகள் என முற்றிலும் புது கான்செப்ட். இந்த ஆல்பத்தை வெளியிடுவதில் சரிகமா நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது. மேலும் இந்த ஆல்பம் பல புதிய கலைஞர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையாய் அமையும்” என நம்பிக்கை தெரிவித்தார்.