Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பலவீனத்தை பலமாக மாற்றி வெற்றி பெற்றுள்ளேன் : தமன்னா

06 ஜூலை, 2015 - 16:05 IST
எழுத்தின் அளவு:
Doing-Film-Baahubali-is-new-experience-for-me--Tamannaah-Bhatia

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ள தமன்னா, மிக அதிக பொருட்செலவில் தயாராகியுள்ள பாகுபலி படத்தில் நடித்துள்ளார். பாகுபலி படம், இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது. படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் மற்றும் இயக்குநர் ராஜமெளலி, நடிகர்கள் பிரபாஸ், ராணா உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்....


பாகுபலி...எந்த மாதிரியான படம்?


பாகுபலி, பீரியட் படம். 7 முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியே இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. படம் குறித்து ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், ராஜ்யத்தை கைப்பற்ற இரு சகோதரர்களுக்கிடையே நடக்கும் யுத்தமே படத்தின் கதை. பிரபாஸ் பாகுபலி ஆகவும், ராணா வில்லன் கேரக்டரிலும் நடித்துள்ளனர்.


படத்தில் உங்களது ரோல்....


படத்தில் எனது கேரக்டர் பெயர் அவந்திகா. இப்படத்தில் நடித்தது, புதுவித அனுபவமாக இருந்தது. நான் இதுவரை சண்டைக்காட்சிகளில் நடித்ததில்லை, இப்படத்தில் தான் முதல்முறையாக, சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளேன்.


இந்த படத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகள் அணுகியிருந்த நிலையில், உங்களுக்கு எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது?


ஆமாம், இந்த படத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகள் விருப்பம் தெரிவித்திருந்தனர். கதைக்கு தமன்னா தான் சரியாக இருப்பார் என்று இயக்குநர் ராஜமெளலி சார் நினைத்ததன் காரணமாகவே, இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. வேறு எதுவும் இதற்கு காரணமாக இருக்கமுடியாது. ராஜமெளலி மிகத்திறமையான இயக்குநர். சிறிய பொருளை, மிகப்பிரமாண்டமாக காட்டக்கூடியவர். சூட்டிங்கின் போது ஒருநாளும் அவர் சோர்வாக இருந்து நான் பார்த்ததில்லை.


இந்த படத்திற்காக ஏதாவது பயிற்சி பெற்றீர்களா?


ஆமாம். எனது கேரக்டர் மற்றும் சண்டைக்காட்சிகளுக்காக, பயிற்சி பெற்றேன். பீரியட் படம் என்பதால், சண்டைக்காட்சிகளில், வில் மற்றும் அம்புகளே பயன்படுத்தப்பட்டன. வில் மற்றும் அம்புகளை கையாளும் பயிற்சியை பெற்றேன். அதோடு மட்டுமல்லாது, தற்காப்புக்கலைகளையும் பயின்றேன். எனக்கு கிடைக்கும் பாராட்டுகள் அனைத்தையும், எனது நடன ஆசிரியர் மற்றும் பயிற்சியாளர்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.


டிரைலரே படத்தின் கதையை சொல்லிவிடுகிறதாமே...உண்மையா?


இல்லை. பல படங்களின் டிரைலர் அப்படி இருக்கலாம். ஆனால், ராஜமெளலி சாரின் படங்கள் அந்த விதத்தில் இருக்காது. படத்தின் டிரைலர் எவ்வாறு மக்களிடம் பெரும்வரவேற்பு பெற்றுள்ளதோ, அதே போல் படமும், பல மடங்கு வரவேற்பை பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. படம் பார்ப்பவர்களுக்காக, சர்ப்ரைஸை, ராஜமெளலி சார் வைத்துள்ளார். அதை படம் பார்க்கும்போது மட்டுமே உணர முடியும்.


படத்தில் உங்களுக்கு பிடித்த 2 விஷயங்கள்


படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து விஷயங்களும் எனக்கு பிடித்திருந்தன. ஏனெனில், அவை யாவும் எனக்கு புதுமையாக இருந்தன. முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் காட்சிகள் உருவாக்கம் ஆகும். படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்களை உருவாக்குவதற்கே, ஒரு ஆண்டுகளுக்கு மேல் தேவைப்பட்டது. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் இயக்குநரின் அர்ப்பணிப்பை...ஒரு காட்சி படமாக்கப்படுவதென்றால், அதற்கு முன் சில நாட்களுக்கு முன்னரே, அக்காட்சி தொடர்பாக, பல்வேறு நாட்கள் ஒத்திகை நடைபெறும். இந்த படத்தி்ல், பழைய மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


பிரபாஸ் உடன் இணைந்து நடித்தது குறித்து...


பிரபாஸ் உடன் ஏற்கனவே நான் படங்களில் நடித்துள்ளேன். பிரபாஸ் எனது சிறந்த நண்பர். இப்படத்தில், மீண்டும் பிரபாஸ் உடன் இணைந்து நடிக்கப்போகிறோம் என்று தெரிந்ததும் மிகவும் சந்தோஷப்பட்டேன். ராஜமெளலி சாரின் இயக்கத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ள்ளதாக, பிரபாஸிடம் கூறியபோது,. அவர் எதுவும் தெரியாததுபோல், எனக்கு வாழ்த்து தெரிவித்தார். சூட்டிங்கின்போது, பல இடங்களில் திணறிய எனக்கு, பிரபாஸ் தான் உதவி செய்தார்.


சூட்டிங் எங்கெல்லாம் நடைபெற்றது?


படத்தின் பெரும்பாலான பகுதிகள் ஐதராபாத், மகாபலேஸ்வர் மற்றும் பல்கேரிய நாட்டில் படமாக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதிகளில் நடைபெற்ற சூட்டிங்களில் நான் இதுவரை பங்கேற்றதில்லை. இப்படத்தில், அந்த மாதிரியான பகுதிகளிலேயே, பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. இதன்மூலம் எனது பலவீனத்தை, பலமாக மாற்றியுள்ளேன்.என்று தமன்னா கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in