ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமல்ஹாசன் நடித்து வெளிவந்துள்ள 'பாபநாசம்' திரைப்படம் வெளியான எல்லா ஊர்களிலும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் நடித்துள்ள ஒரு படத்தை குடும்பத்தினருடன் அனைவரும் வந்து பார்த்து நீண்ட நாட்களாகிறது என்ற குறையை இந்தப் படம் போக்கியிருக்கிறது. ஒரு பொறுப்பான அப்பாவாக சுயம்புலிங்கம் கதாபாத்திரத்தில் கமல்ஹாசனின் நடிப்பை ரசிகர்களும், திரைப்பட நட்சத்திரங்களும் பாராட்டிப் பேசி வருகிறார்கள்.
'பாபநாசம்' படம் மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக்தான் என்பது அனைவருக்கும் தெரியும். மீண்டும் இப்படி ரீமேக் படங்களில் நடிப்பீர்களா என கமல்ஹாசனிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு கமல்ஹாசன் ,“ ரீமேக் என்பதற்கு வெற்றி மட்டுமே ஒரு அளவு கோல் அல்ல. மற்ற மொழிகளில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். ஆனால், அதில் விஷயமுள்ள படங்களை மட்டுமே ரீமேக் செய்தால் வெற்றி பெற முடியும். ஏதோ வெற்றி பெற்று விட்டது என்ற காரணத்திற்காக மட்டுமே ஒரு படத்தை ரீமேக் செய்துவிடக் கூடாது. 'த்ரிஷ்யம்' படத்தில் அதன் கதையும் அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் விதத்தில் இருந்தது. அதனால்தான் அதன் ரீமேக்கில் நடித்தேன். இன்னும் பெங்காலி உட்பட பல மொழிகளில் எவ்வளவோ நல்ல படங்கள் இருக்கிறது. அவற்றை ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு,” என்றார்.