பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இன்றைக்கு செல்பி மோகம் பிரபலங்கள் முதல் சாதாரண மனிதன் வரை பிடித்து ஆட்டுகிறது. கோவிலுக்கு சாமி கும்பிடப்போனால் கூட, கோவில் பிரகாரத்தில் நின்றவாறு ஒரு செல்பி, முடிந்தால் கடவுள் சிலையுடன் சேர்த்து ஒரு செல்பி எடுத்து அதனை உடனுக்குடன் பேஸ்புக், ட்விட்டர் வலைதளங்களில் போட்டு லைக்குகளை அள்ளவேண்டும். இதுதான் செல்பி மோகம் கொண்டவர்களின் எண்ணம். சந்தோஷ நிகழ்வுகளில் சரி.. ஆனால் சாவு வீட்டிலுமா செல்பி எடுக்க வேண்டும் என கொதித்துள்ளார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன்.
சமீபத்தில் தனது நண்பரின் மறைவுக்காக அஞ்சலி செலுத்தவும், அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவும் டில்லி சென்றிருந்தார் அமிதாப். ஆனால் நண்பரின் இறுதி ஊர்வலத்தின் போது பலர் செல்பி எடுத்து அதை நண்பர்களுடன் ஷேர் பண்ணிக்கொண்ட செயலை பார்த்து தனது வேதனை அடைந்த அமிதாப், தனது சோஷியல் பக்கத்தில் இதுகுறித்து தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
“நல்ல நண்பன்.. பேசிக்கிட்டே இருந்தான்.. திடீர்னு போயிட்டான்.. ஆனால் அவனுடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பல பேர் செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர். அப்படியென்றால் அவன் சாவுக்கு என்ன மரியாதை..? இவர்கள் இறந்தவர்களையும் மதிக்கவில்லை. அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தவர்களையும் மதிக்கவில்லை.. என்ன மனிதர்கள்..?”“ என தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் அமிதாப்.