பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பல வெற்றிப் படங்களைத் தயாரித்தும், வினியோகத்தும் உள்ள எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தற்போது தயாரித்து வரும் படம் 'மாப்பிள்ளை சிங்கம்'. இந்தப் படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் இன்னும் படமாக்க வேண்டியுள்ளதாம். ஆனால், அஞ்சலி கால்ஷீட் தராமல் இழுத்தடித்து படத்திற்கு சிக்கலைத் தருவதாகச் சொல்கிறார்கள். அஞ்சலி கால்ஷீட் தராத காரணத்தால் இந்த மாதம் வெளிவந்தாக வேண்டிய படத்தை மேலும் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாம்.
ஆனால், அஞ்சலியே வேறு விதமான தகவலைச் சொல்கிறார். இந்தப் படத்திற்காக 50 நாட்களுக்கும் மேல் கால்ஷீட் கொடுத்துவிட்டேன். ஆனாலும், திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தாமல் எனது கால்ஷீட்டை வீணாக்கி விட்டார்கள் என்கிறார். வேண்டுமானால் கால்ஷீட் தருகிறேன், ஆனால், படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கிறாராம். அதற்கு தயாரிப்பாளர் தரப்பு தயாராக இல்லை என்றும் சொல்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகம் மறந்து போன அஞ்சலியை 'மாப்பிள்ளை சிங்கம்' படத்தின் மூலம் மீண்டும் அழைத்து வந்ததே அந்தத் தயாரிப்பு நிறுவனம்தான். அதற்கு அஞ்சலி தரும் பரிசு இதுதானா என்கிறார்களாம் அவர்கள். இதனால் அஞ்சலியை மீண்டும் தமிழில் ஒப்பந்தம் செய்ய பல தயாரிப்பாளர்கள் தயங்கி வருகிறார்களாம்.