இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? |
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் கவுன்சில் பதவியிலிருந்து விலகுவதாக, பிரபல நடிகை பல்லவி ஜோஷி கூறியுள்ளார்.
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக சவுகான் உள்ளார். இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் கவுன்சிலை மாற்றியமைக்க வேண்டும் மற்றும் தலைவர் சவுகானை, அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அப்பயிற்சி நிறுவன மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை பல்லவி ஜோஷி கூறியதாவது, இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் கவுன்சில் பதவியிலிருந்து தானும் விலக உள்ளேன். இதற்கான கடிதத்தை, மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவிவருகிறது. எதிர்மறை எண்ணம் கொண்ட நபர்களே, பயிற்சி நிறுவனத்தில் நிறைந்துள்ளனர். இவர்களது மத்தியில், நமக்கும் நேர்மறை விஷயங்களே எழ வாய்ப்பில்லை. இதன்காரணமாக, மனதளவில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். கவுன்சில் உறுப்பினர் பதவியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக பல்லவி ஜோஷி கூறியுள்ளார்.
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் கவுன்சிலில், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, ஒளிப்பதிவாளர் ஷைலேஷ் குப்தா, நடிகை வித்யாபாலன், நடிகர்கள் ராகுல் சோலாபுர்கர் உள்ளிட்டோர் உள்ளனர்.