தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜீ தமிழ் சேனலில் ஓம்காரம் என்ற பக்தி நிகழ்ச்சி, கேப்டன் டி.வியில் டிபன் டைம், எங்கேயும் சமையல் போன்ற குக்கிங் நிகழ்ச்சி, கலைஞர் டி.வியில் நட்சத்திர பேட்டி என பல சேனல்களில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறவர் சசிகலா. பல சீரியல்களில் நடித்து வந்த சசிகலா தற்போது சீரியல்களை நடிப்பதை தவிர்த்து விட்டு நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். குழந்தைகளுக்கான ஒரு ப்ளே ஸ்கூல் கட்ட வேண்டும் என்பது அவரது லட்சியம்.
இதுபற்றி அவர் கூறியதாவது: என்னைக் கேட்டால் சீரியலில் நடிப்பது எளிதானது. இயக்குனர் சொல்வதை கேட்டு அப்படியே செய்தால் போதும். ஆனால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அப்படியில்லை. அந்த நிகழ்ச்சி பற்றி தெளிவான அறிவு இருக்க வேண்டும், டைமிங்கா பேசத் தெரிந்திருக்க வேண்டும். கடுமையான முன் தயாரிப்பு வேண்டும். அப்போதுதான் நிகழ்ச்சியை பிசிறில்லாமல் தொகுத்து வழங்க முடியும்.
நிகழ்ச்சிகள் மூலம் சினிமா, சின்னத்திரையில் நடிக்க வாய்ப்புகள் நிறைய வருகிறது. அதில் நல்ல கதைகள், கேரக்டர்கள் தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன். நடித்து நிறைய சம்பாதித்து அந்தப் பணத்தைக் கொண்டு குழந்தைகளுக்கான ஒரு ப்ளே ஸ்கூல் கட்ட வேண்டும் என்பதே லட்சியம். கடவுள் அருள் இருந்தால் நடக்கும். என்கிறார் சசிகலா.