'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில், மாப்பிள்ளை படத்தில் நடிக்கத் தொடங்கியதில் இருந்த இப்போது வரை ஹன்சிகாவின் அழகை அவர் சம்பந்தப்பட்ட மேடைகளில் புகழ்ந்து பேசியே வருகின்றனர். அவரது சமகாலத்து நடிகைகள் பலர் அழகானவர்களாக இருந்தும்கூட, ஹன்சிகாவின் பளிச்சென்ற கலர் அவருக்கு பெரிய ப்ளசாக அமைந்திருக்கிறது. அதேபோல், ரசிகர்களும் அவரது அழகை இணையதளங்களில் பக்கம் பக்கமாக வர்ணித்து ஹன்சிகாவை திக்குமுக்காட வைத்து வருகின்றனர். தற்போது அவர் நாயகியாக நடித்து வெளியாகயிருக்கும் படங்களின் இயக்குனர்கள்கூட ஹன்சிகா போன்று ஒரு அழகி இல்லை என்று அடித்து சொல்லி வருகின்றனர். ஆனால் இந்த நிலையில், சமீபத்தில் ஒரு அவுட்டோருக்கு சென்ற இடத்தில், அய்யே... இதுவா ஹன்சிகா -என்று அவரைப்பார்த்த ஒரு ரசிகர் முகம் சுழித்து விட்டாராம். இந்த வாசகம் ஹன்சிகாவின் காதில் விழுந்ததால் அதிர்ச்சியடைந்து விட்டாராம்.
இதற்கு முக்கிய காரணம், சினிமாவில் வண்ண உடையில் மேக்கப்பில் ஜொலிக்கும் ஹன்சிகா அன்றைய தினம், ஒரு சாதாரணமான வடஇந்திய உடையணிந்து சென்றாராம். அதோடு பெரிய அளவில் மேக்கப், சிகை அலங்காரம் செய்து கொள்ளாமல் சென்றிருந்தாராம். அதைப்பாத்துதான் அந்த ரசிகர் மிரண்டு போய் அப்படி சொல்லி விட்டதாக பின்னர் அவரைச்சார்ந்தவர்கள் ஹன்சிகாவிடம் சொன்னார்களாம். அதையடுத்து, இனிமேல் பொதுஇடங்களுக்கும் சினிமாவில் நடிப்பது போன்று தன்னை அலங்கரித்தபடி, தென்னிந்திய மக்கள் அணியும் ஆடைகளை அணிந்து செல்லவும் முடிவு எடுத்திருக்கிறாராம் ஹன்சிகா.