டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பெரும்பாலும் முன்னணி ஹீரோக்கள் தங்களை சுற்றித்தான் கதை இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கதாநாயகிகளை தொட்டுக்கொள்ளும் கவர்ச்சி ஊறுகாயாகத்தான் பயன்படுத்த சொல்வார்கள். ஆனால் இந்த விசயத்தில் நிறையவே விட்டுக்கொடுக்கிறார் ஜெயம்ரவி.
குறிப்பாக, ரோமியோ ஜூலியட் படத்தில் ஹன்சிகாவுக்கே தன்னை விட பிரதான கேரக்டர் என்றபோதும், அதை அவர் பெருசுபடுத்தவில்லை. இதற்கெல்லாம் மேலாக, அந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஹன்சிகா தலைகாட்டாத போதும், அவர் தன்னை விட சிறப்பாக நடித்திருந்ததாக ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார். இந்த மாதிரி கதாநாயகிகளின் நடிப்பை எந்த ஹீரோக்களும் இத்தனை ஓப்பனாக இதுவரை சொன்னதில்லை.
இந்த நிலையில், அடுத்தபடியாக அப்பாடக்கர் படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம்ரவி, அந்த படத்தில் நடித்துள்ள த்ரிஷா-அஞ்சலி இருவரில் த்ரிஷாவின் நடிப்பை புகழ்ந்து பேசி வருகிறாராம். சில காட்சிகளை குறிப்பிட்டு இந்த மாதிரியெல்லாம் இப்போது நடிப்பதற்கு ஆர்ட்டிஸ்ட் இல்லை. அது த்ரிஷாவினால் மட்டுமே முடியும் என்று அவர் இல்லாத நேரத்தில் சொன்னாராம். விசயம் த்ரிஷாவின் காதுகளுக்கு எட்டியதை அடுத்து, இப்படி கதாநாயகிகளின் நடிப்பை பெருமையாக சொல்வதற்கு ஒரு பெரிய மனசு வேண்டும். அது ஜெயம்ரவியிடம் உள்ளது என்று பதிலுக்கு அவரை புகழ்ந்து தள்ளினாராம்.