'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனன்யா, எங்கேயும் எப்போதும் உள்பட பல படங்களில் நடித்து வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும்போது திடீரென்னு தன் தந்தை வயதுள்ள ஆஞ்சநேயலு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அருக்கு வாய்ப்புகள் குறைந்து விட்டது.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: தமிழ் படங்களில் வாய்ப்புகள் குறைந்திருப்பது உண்மைதான். அதற்கு காரணம் நான் யாரையும் தேடிச் சென்று வாய்ப்பு கேட்பதில்லை. மானேஜர்கள் வைத்து வாய்ப்பு தேடுவதும் இல்லை. அனன்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று என்னை தேடிவருகிற கேரக்டர்களில் மட்டும் நடிக்கிறேன். என் கணவர் சினிமாவில் நடிக்க எந்த தடையும் சொல்லவில்லை. அவர் சொன்னது யாரையும் தேடிச் சென்று வாய்ப்பு கேட்காதே என்பதுதான். அதை நான் கடைபிடிக்கிறேன். அனன்யா குறிப்பிட்ட சில கேரக்டருக்குதான் பொருத்தமாக இருப்பார் என்று தமிழ் இயக்குனர்கள் முடிவு செய்திருக்கலாம். என்னால் மார்டன் கேரக்டரிலும் நடிக்க முடியும். அதற்கான வாய்ப்பு வந்தால்தானே செய்து காட்ட முடியும்.