‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
எந்த நேரத்தில் நகுல் நடித்த நாரதன் படத்திற்கு நாரதன் எனப்பெயர் சூட்டினார்களோ? பாவம்., நாரதன் நாயகர் நகுல் அதிக சம்பளம் கேட்டு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கே வரவில்லை...என தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் நாரதன் படத்தின் தயாரிப்பு தரப்பு புகார் பட்டியல் வாசிக்க., உடனடியாக, தன் தரப்பு நியாயத்தை நடிகர் சங்கத்திற்கு கடிதமாக அனுப்பியுள்ளார் நகுல். கூடவே, அதனோடு தனக்கு ரூ. 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டு அக்ரிமெண்ட்டும் போடப்பட்டிருக்கும் விஷயத்தையும் அதன் காப்பியையும் நடிகர் சங்கத்திற்கு நகுல் அனுப்பிய பின் தான் நகுல் மீதுள்ள நியாயம் நடிகர் சங்க செயலாளர் ராதாரவிக்கே தெரியவந்திருக்கிறது. அதில் உள்ள விவரப்படி., நகுலுக்கு ரூ. 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டு, பல தவணைகளாக, ரூ. 32 லடசம் தரப்பட்டிருக்கிறது. மீதி ரூ. 18 லட்சம் வந்தால்தான் மத்திய அரசின் புதிய உத்தரவுப்படி, வாங்கிய சம்பளத்திற்கு வரிகட்டும் உத்தேசத்தில் இருந்திருக்கிறார் நகுல். வரியை உரிய நேரத்தில் கட்டி முடிக்காவிட்டால் மாதாமாதம் காலதாமத பெனால்டி கட்ட வேண்டுமாம்.