இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டுள்ள 'பாகுபலி' திரைப்படம் இந்தியா முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து இறுதிக் கட்டப் பணிகளும் ஏறக்குறைய முடிவடைய உள்ள நிலையில் இந்தப் படம் தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் அதிகமான திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இன்னும் சில பல திரையரங்குகளில் பேச்சு வார்த்தை நடந்து கொண்டுவருதாகவும் சொல்கிறார்கள்.
'பாகுபலி' படம் ஹைதராபாத்தில் மட்டும் சுமார் 39 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பெங்களூருவில் 25 திரையரங்குகளிலும், சென்னையில் 13 திரையரங்குகளில் மட்டுமே வெளியாக உள்ளது. ஒரு நேரடி தமிழ்ப் படத்துக்குண்டான வரவேற்பு 'பாகுபலி' படத்திற்கு இதுவரை கிடைக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. படத்தில் தமிழ் நடிகர்களான சத்யராஜ், நாசர் மற்றும் அனைவருக்கும் தெரிந்த அனுஷ்கா, தமன்னா நாயகிகளாக நடித்திருந்தாலும், நாயகனாக நடிக்கும் பிரபாஸ், வில்லனாக நடிக்கும் ரானா இருவரும் தெலுங்கு நடிகர்கள் என்பதே படத்தின் தமிழ் வெளியீட்டிற்கு கொஞ்சம் தடையாக இருப்பதாக வினியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.