தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தற்போது அஜீத்தின் பாசத்திற்குரிய தங்கை வேடத்தில் நடித்து வரும் லட்சுமிமேனன், நிஜத்திலும் அதிக செண்டிமென்டானவராம். குறிப்பாக, அவரது அம்மா மீது அதிக பாசம் கொண்டவராம் லட்சுமிமேனன். அதனால் அம்மா இல்லாமல் உறவினர்கள் துணையுடன் படப்பிடிப்புக்காக கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்தால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் அம்மாவுடன் போனில் பேசிக்கொண்டேயிருப்பாராம்.
அது மட்டுமின்றி, படப்பிடிப்பு தளத்தில் நடக்கிற விசயங்களையும் அம்மாவிடம் பகிர்ந்து கொண்டேயிருக்கும் லட்சுமிமேனன், தான் நடிக்கப்போகும் காட்சிகள் பற்றியும் கூறுவாராம். பின்னர் அந்த காட்சியில் நடித்த முடித்தபிறகு தான் இந்த மாதிரி நடித்ததாகவும் சொல்வாராம். அந்த அளவுக்கு இங்கே நடப்பதை உடனுக்குடன் அம்மாவுக்கு தெரியப்படுத்திக்கொண்டேயிருப்பாராம் லட்சுமிமேனன்.
மேலும், அவரது அம்மா உஷா மேனன், ஓகே செய்த கதைகளில் மட்டும்தான் நடிப்பாராம் லட்சுமிமேனன். காரணம், சில கதைகள் அவரது அம்மாவுக்கு பிடிக்காத நிலையில், இவர் ஓகே பண்ணி நடித்து எதிர்பார்த்தபடி வெற்றியை கொடுக்கவில்லையாம். அதனால் சமீபகாலமாக தனது அம்மா ஓகே சொல்லும் கதைகளில் மட்டுமே நடிப்பது என்கிற செண்டிமென்ட்டையும் கடைபிடித்து வருகிறாராம் லட்சுமிமேனன்.