அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
ஸ்ரீதிவ்யா ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றபோதும், சென்னையிலும் அவருக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள். அதனால் தனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அவர்களை சந்தித்து பொழுதை கழிக்கிறார். அப்போது தான் ஒரு நடிகை என்பதை மறந்து விட்டு, தெருக்களில் இறங்கி பால் அடித்து விளையாடுகிறாராம் ஸ்ரீதிவ்யா.
அதோடு நில்லாமல், உயிருக்கு உயிரான தோழிகளை சில சமயங்களில் தான் நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கும் வரவைத்து கேரவனுக்குள் அமர்ந்து விளையாடுகிறாராம். ஆனால் தனக்கு டேக் ரெடியாகி விட்டதை உதவி இயக்குனர்கள் தெரிவிக்கும்போது தோழிகளை கேரவனுக்குள்ளேயே இருக்க சொல்லிவிட்டு கேமரா முன்பு வந்து நடிக்கிறார்.
ஆனால், யாராவது தோழிகள் தான் நடிப்பதை பார்க்க வேண்டும் என்று வெளியில் வந்தால், அவர்களை உள்ளே செல்லுமாறு கண்டிசனை துரத்தி விடுகிறாராம். காரணம், தான் நடிப்பதை தனக்கு வேண்டப்பட்டவர்கள் பார்த்தால் ஸ்ரீதிவ்யாவுக்கு நடிப்பே வராதாம். அதன்காரணமாகவே, ஸ்ரீதிவ்யாவின் அம்மா அவர் நடித்துக்கொண்டிருக்கும் ஏரியா பக்கமே வரமாட்டாராம். அந்த அளவுக்கு அம்மாவுக்கும் கண்டிசன் போட்டு வைத்திருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா.