வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சுசீந்திரன் இயக்கத்தில் பாண்டியநாடு படத்தில் வைரமுத்து, டி.இமான் கூட்டணியில் பாடல்கள் வெற்றி பெற்றன. அதனால் அதே கூட்டணி விஷால் நடிக்கும் பாயும்புலி படத்திலும் தொடர்கிறது. படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. மதுரைப் பின்னணியில் நடக்கும் கதை என்பதால் மதுரைக்காரர் வைரமுத்துக்கு எழுத சொல்ல வேண்டுமா என்ன? ஐந்து பாடல்களும் விதவிதமாக வெவ்வேறு கருத்துகளை சொல்லும்படி உள்ளனவாம். அதில் ஒரு பாடல் வருகிறது. மருத மருதக்காரி வெள்ளயன எதுத்தா.. புலிய புலியக் கூட மொறத்தால அடிச்சா என்கிற அந்தப் பாடலுக்கு மரக்காணம் அருகே ஒரு பிரமாண்ட செட் போட்டுப் படமாக்கியுள்ளனர். விஷால் காஜல் நடித்துள்ளனர். இன்னொரு பாடலைப் பின்னி மில்லில் செட் போட்டு எடுத்துள்ளனர். இதில் குத்துப் பாட்டு ஆடும் குத்து விளக்குகளின் உரிமைகள் பற்றி எழுதியுள்ளாராம் வைரமுத்து. குத்துப்பாடல் ஆடும் பாத்திரங்களை குறைவாக மதிப்பிட வேண்டாம் என்று சொல்கிறதாம் அந்தப் பாடல்.