இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
யாகாவாராயினும் நாகாக்க ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் எடுக்கப்பட்ட படம். ஆதிக்கு நல்ல திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம். ஆனால் விமர்சன வரவேற்பு இருந்த அளவுக்கு வசூல் வரவேற்பு இல்லை. படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்களும் திரையுலகினரும் படம் மேக்கிங் நன்றாக இருக்கிறது ஆனால் படத்தின் இரண்டாவது பாதியின் நீளத்தைக் குறைத்தால்தான் நன்றாக இருக்கும் என்றார்கள், அப்போது இயக்குநர் சத்யபிரபாஸ் அவர்கள் சொன்னதை ஏற்காமல் தான் செய்திருப்பதே சரி என பிடிவாதமாக இருந்தார். திரையரங்க விசிட் அடித்த போது ஆடியன்ஸ் அடித்த கமெண்ட்களில் மனம் மாறி படத்தின் நீளத்தைக் குறைத்தார்.
தெலுங்கிலும் தமிழைப் போலவே அதே நாளில் வெளியிட விரும்பினார். ஆனால் தெலுங்கில் வெளியீடு தள்ளிப் போயுள்ளது. அங்கு மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் நடித்த படங்கள் வெளியாவதாலும் அடுத்து பாகுபலி வருவதாலும் தள்ளிப்போயுள்ளது. தமிழைவிட தெலுங்கில் மேலும் நீளத்தைக் குறைத்து வெளியிடப் போகிறார்கள். தெலுங்கில் மலுப்பு என்கிற பெயரில் வெளியாகவுள்ளது. சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்தான் தெலுங்கில் வெளியிடுகிறது.