ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்சினிமா வரலாற்றில் மிக குறுகிய காலத்தில் உச்சத்தைத்தொட்டவர் சிவகார்த்திகேயன். அடிப்படையில் மிமிக்ரி கலைஞனான சிவகார்த்திகேயன் ஒரு ரியாலிட்டி ஷோவில் நடனம் ஆடினார். பின்னர் நிகழ்ச்சித் தொகுப்பாளரானார். சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடிய அவர் சின்ன சின்ன வேடங்களில் தலைகாட்டினாலே போதும் என நினைத்தார். வழக்கு எண் படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கிக் கொண்டிருந்தபோது அந்தப் படத்தில் காமெடி வேடம் கிடைக்குமா என வாய்ப்பு கேட்டார். இந்தப் படத்தில் சான்ஸ் இல்லை அடுத்தப் படத்தில் பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பினார் பாலாஜி சக்திவேல். அவருடைய அடுத்தப் படம் இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் சிவகார்த்திகேயன் உயரத்துக்கு சென்றுவிட்டார்.
சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து காமெடி நடிகரானவர் பிறகு ஹீரோவாகி இன்றைக்கு பல கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார். கோடி கணக்கில் செலவு செய்து சொந்தப்படம் எடுக்கும் அளவுக்கும் முன்னேறிவிட்டார்.
இந்நிலையில் அவரது புகழ்பாடும் ஆல்பம் ஒன்று விரைவில் வெளியாக இருக்கிறது. எங்க வீட்டுப்பிள்ளை என்று அந்த ஆல்பத்துக்கு பெயரிடப்பட்டிருக்கிறது. பிரகாஷ் பாஸ்கர் என்பவர் பாடல் எழுதி இந்த ஆல்பத்தை உருவாக்குகிறார்.