ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
தமிழ் சினிமாவின் இசை ராஜாவான இளையராஜா, சென்னை, தி.நகர் வாணி மகாலில், மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்று கூட்டியிருந்தார். அதில் கலந்து கொண்டு இளையராஜா பேசியதாவது...
நான் எத்தனையோ பாடல்களை உங்களுக்காக பாடியிருக்கிறேன். நான் இங்கு உங்களை சந்திக்க காரணம், நீங்கள் என் பாடல்களையோ அல்லது பிறரது பாடல்களையோ மேடையில் பாடும்போது, அதற்கு உரிய அனுமதி பெற்று பாட வேண்டும். இதற்காகத்தான் ஐபிஆர்எஸ்., என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அவர்கள் முறையாக அதை செய்யவில்லை.போலியான கணக்கு காட்டி என்னை போன்றவர்களை ஏமாற்றுகிறார்கள். என் பாடல்களுக்காக அவர் வசூலிப்பதில் 10 சதவீதம் கூட எனக்கு கிடைக்கவில்லை, அவர்கள் கொடுப்பதை வாங்க எனக்கு மனமில்லை, அதனால் அந்த அமைப்பிலிருந்து விலகிவிட்டேன்.
நான் இப்போது உங்களிடம் வேண்டுவது, நீங்கள் என் பாடல்களை பாடும் போது என் பாடல்களுக்கான தொகையை என் அலுவலகத்தில் நேரடியாக செலுத்தலாம் என யோசித்து உங்களை அழைத்தேன். இவ்வளவு பணம் தாருங்கள் என்று உங்களை நான் கட்டாயப்படுத்தவில்லை, எவ்வளவு பணம் கொடுக்கலாம் என்பதை நீங்களும், சினி மியூசிக் யூனியனும் பேசி முடிவெடுங்கள். இப்படி பேசுவதால் நான் பணம் கேட்டு வருகிறேன் என்று எண்ண வேண்டாம், நான் எப்பவும் கொடுப்பவன், கேட்பவன் அல்ல.
இவ்வாறு இளையராஜா பேசினார்.