ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டில் வெளியான பிள்ளை நிவூ லெனி ஜீவிதம் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடிகர் சாய் தரன் மற்றும் நடிகை ரெஜினா நடித்திருந்தனர். அதே ஜோடி தற்போது மீண்டும் இணைந்து சுப்ரமணியம் பார் சேல் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இயக்குநர் ஹரீஷ் சங்கர் இயக்கும் இப்படத்தின் திரையிடும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தை எஸ்.வி.சி பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜு தயாரிகின்றார். அமெரிக்காவில் இப்படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும் இப்படத்தில் நடிகை அடா சர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ராமைய்யா வஸ்தாவைய்யா படம் தோல்வியை தழுவியது. இதனால் ஸ்டைலான காதல் கதை அம்சம் கொண்ட சுப்ரமணியம் பார் சேல் படத்தின் மீது இயக்குநர் ஹரீஷ் சங்கர் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்.