ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஷப் பல் பிடுங்கப்பட்ட பாம்பை சினிமாவில் ஹீரோக்கள் படு ஸ்டைலாக பிடித்து வீராப்பு காட்டுவார்கள். ஆனால் சரத்குமார் நிஜ பாம்பை பொதுமக்கள் மத்தியில் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
நேற்று சரத்குமார் தி.நகரில் உள்ள தனது கட்சி அலுவலகத்திலிருந்து தனது மனைவியின் தயாரிப்பு அலுவலககமான ராடான் டி.விக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற ரோட்டில் கடும் டிராபிக் ஜாம். என்னவென்று விசாரித்தார் சரத்குமார். சாலையோரத்தில் ஒரு பாம்பு கிடக்கிறது. அதனால் எல்லோரும் பயந்து நிற்கிறார்கள் சிலர் அதை அடித்துக் கொல்ல முயற்சித்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
இதைக் கேட்டதும் காரில் இருந்து இறங்கிய சரத்குமார் பாம்பு இருந்த இடத்துக்குச் சென்றார். ஒரு பொந்துக்குள் நுழைந்திருந்த பாம்பை ஒருவர் குச்சியால் குத்தி கொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தார். அருகில் சென்ற சரத்குமார், அவரிடமிருந்த குச்சியை பிடுங்கி எறிந்து விட்டு பொந்துக்குள் கைவிட்டு பாம்பை பிடித்து வெளியே எடுத்தார். அது ஒரு பச்சை பாம்பு. பின்பு எல்லோரையும் கலைந்து போகச் சொல்லிவிட்டு அருகில் இருந்த புதருக்குள் அதை விரட்டி விட்டார். பின்னார் காரில் ஏறி அலுவலம் சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.