'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
"நான் நான்கு தலைமுறைகளை பார்த்தவன் என்னால் இன்றைய இளைஞர்களை தாண்டி படம் எடுக்க முடியும்" என்று பாரதிராஜா கூறினார். பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் நடித்துள்ள உறுமீன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பேசியதாவது:
இன்றைய சினிமா அமானுஷ்ய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இளைஞர்கள் புதிதாக நிறைய யோசிக்கிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அவர்களுக்கு கை கொடுக்கிறது. இங்கு பேசிய எஸ்.ஜே.சூர்யா என்னை பெரிதாக பேசிவிட்டு கார்த்திக் சுப்புராஜை காண்டம்ப்ரரி இயக்குனர் என்று பாராட்டினார். அப்படியென்றால் என்னை அவர் காண்டம்ப்ரரி இயக்குனர் இல்லை என்கிறார் என்று அர்த்தம்.
நான் சின்னப்பா கால சினிமாவையும் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆர், சிவாஜி கால சினிமாவையும் பார்த்திருக்கிறேன். இன்றைய சினிமாவையும் பார்க்கிறேன். இன்றைய இளைஞர்களை தாண்டியும் என்னால் செல்ல முடியும் அத்தனை விஷயங்கள் என்னிடம் இருகிறது. நானும் வருகிறேன். பாபி சிம்ஹா நடித்த படங்களை பார்த்து வருகிறேன். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. அவருக்கு விருது கிடைக்க நிறைய மெனக்கெட்டேன். இவ்வாறு பாரதிராஜா பேசினார்.