பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
'உ' படத்தில் இடம்பெற்ற "திக்கி திணறது தேவதை..." என்ற பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் ஸ்ருதி நாராணயணன். சமீபத்தில் வெளிவந்த அகத்திணை படத்தில் "தந்தையும் நீயே... தாய்மடி நீயே..." என்ற வைரமுத்துவின் பாடலை 10 வயது சிறுமியின் குரலில் பாடி அசத்தினார். இதுதவிர தற்போது 3 படங்களில் பாடி வருகிறார்.
சமீபத்தில் வெளிவந்த பிளஸ் 2 தேர்வில் 1172 மதிப்பெண்கள் பெற்று ராமநாதபுரம் மாவட்டத்திலேயே முதல் மாணவியாக வந்தார். தற்போது சென்னையில் பிகாம் படித்து வரும் ஸ்ருதி வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக இணையதத்தளம் மூலம் நடத்தப்படும் சேட் ரூம் எனப்படும் இசை போட்டியின் நடுவராக பணியாற்றுகிறார். இணையத்தின் வழியாக பாடல் போட்டி நடத்தி பரிசு கொடுக்கும் நிகழ்ச்சி இது. இத்தனை குறுகிய வயதில் உலகளாவிய ஒரு பாடல் போட்டிக்கு ஸ்ருதி நடுவராகி இருப்பது பரவலாக பேசப்படுகிறது.