தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்திற்கு வருகிற 5ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் தற்போது தலைவராக இருக்கும் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர், துணை தலைவர்கள் கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள்.
12 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 25 பேர் போட்டியிட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் துணை இயக்குனர்கள். அவர்களில் 6 பேருக்கு செயற்குழு உறுப்பினர் பதவி தருவாதாக பேசப்பட்டதையொட்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைய ஏற்றுக் கொண்டு மற்றவர்கள் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்கள். இதனால் செயற்குழு உறுப்பினர்கள் 12 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.
இணைச் செயலளர் பதவி மட்டும் இழுபறியில் உள்ளது. 4 இணை செயலாளர் பதவிக்கு லிங்குசாமி, சுந்தர்.சி, பேரரசு, ஏகாம்பவாணன், ஜாக்கிராஜ் என 5 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் ஏகாம்பவாணனும், ஜாக்கிராஜூம் துணை இயக்குனர்கள். ஐந்துபேரில் ஒருவர் வாபஸ் பெற்றால் இணை செயலாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. பேச்சு வார்த்தை தோல்வியில் முடியும்பட்சத்தில் இணை செயலாளர் பதவிக்கு மட்டும் தேர்தல் நடக்கலாம் என்று தெரிகிறது.