ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்தியத் திரையுலகில் இன்று வரை முன்னணி நடிகையாக இருந்து வருபவர் த்ரிஷா. சில மாதங்களுக்கு முன் அவருக்கும், தொழிலதிபரும் தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அதற்கடுத்த சில வாரங்களிலேயே அவர்களிருவருக்கும் இடையே பிரிவு என வதந்திகள் வந்தன. அதன் பின் அது பற்றி த்ரிஷா தரப்பிலிருந்து திருமணம் நின்று போய்விட்டது என்று தெரிவித்தார்கள். அதன்பின்தான் அந்த வதந்தி அடங்கின் போனது. அதன் பின் அந்த திருமண முறிவு பற்றி த்ரிஷா எந்த சந்தர்ப்பத்திலும் பேசவேயில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமண முறிவு பற்றி ஓரளவிற்கு வாய் திறந்து பேசியிருக்கிறார்.
“திருமணம் என்ற முறை மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. ஒருவர் காதலுக்காக மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டுமே தவிர காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்ளக் கூடாது. என்னுடைய 25வது வயதில் எனக்குப் பொருத்தமான ஒருவரைப் பார்த்திருந்தால் இந்நேரம் என்னுடைய திருமண வாழ்க்கை வெற்றிகரமாக போய்க் கொண்டிருந்திருக்கும். இதற்கு மேலும் என் திருமண முறிவு பற்றி பேச விரும்பவில்லை. அதில் பலர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், தேவையில்லாமல் அவர்களை இதில் இழுக்க நான் விரும்பவில்லை,” எனச் சொல்லியிருக்கிறார் த்ரிஷா.