டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
குண்டு பல்பு கண்களும், சுருள் முடி ஹேர்ஸ்டைலுமாக மனதை அள்ளுகிறார் நித்யா. இவருக்கு, 27 வயதாகி விட்டதாம். பேச்சையும், சிரிப்பையும் பார்க்கும்போது, சோட்டா பீம் ரசிகையாகவே தெரிகிறார். நித்யாவின் உதடுகள் ஓரிரு வார்த்தைகளை உதிர்ப்பதற்குள், அவரின் பிரம்மாண்ட விழிகள் ஓராயிரம் வார்த்தைகளை பேசுகின்றன. மன...மன...மென்டல் மனதில் என, டூயட் பாடியவரிடம் கொஞ்சம் நேரம் பேசலாம்..
நீங்க ரொம்ப முன்கோபியாமே, அப்படியா?
அப்படியா? என்னை பற்றி எனக்கே தெரியாத விஷயங்களை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. சாப்பாடு, தங்கும் இடம், சூழ்நிலை இதுக்கெல்லாம் ரொம்ப விட்டுக் கொடுத்து போகும் பொண்ணு நான். அதேசமயம் ரொம்பவே, சென்சிட்டிவான பொண்ணும் கூட. ரொம்ப நேரம் யாராவது என்னை பார்த்துக்கிட்டே இருந்தால், எனக்கு ஒரு மாதிரியாகிடும்.
உங்களுடன் நெருக்கமான நட்பு வைத்துள்ள நடிகையர் யார்?
நடிகை ரோகிணி இருக்காங்க. சென்னை வந்தால் அவங்க வீட்டில் தான் இருப்பேன்; சாப்பிடுவேன். எனக்கு கொஞ்சம் நெருக்கமான தோழி அவங்க.
எந்த நடிகர் பிடிக்கும்; யார் கூட நடிக்க ஆசை?
விக்ரம் சார் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவரை மாதிரி நடிப்புக்கு மெனக்கெடும் யாரையும் நான் பார்த்தது இல்லை. கேரக்டருக்காக தன்னை மாற்றி கொள்ளும் விஷயத்தில் அவர் கில்லாடி. அவரை மாதிரி நடிக்க ஆசைப்படுகிறேன்.
நீங்க படம் இயக்கப் போவதாக கூறப்படுகிறதே?
எல்லாரும் சொல்வாங்க. நான் அப்படி இதுவரை சொன்னது இல்லை. நிறைய எழுதுவேன். ஆனால், இயக்குனர் ஆகும் அளவுக்கு யோசிப்பது இல்லை. ஒளிப்பதிவாளராக ஆசைப்பட்டது உண்டு. இப்போது அந்த ஆசையில்லை. நிறைய படங்கள் நல்லா போயிட்டிருக்கு; பார்க்கலாம். இன்னும் நிறைய நேரம் இருக்கு.
நடிக்கும் போது, மொழி பிரச்னை வந்தது உண்டா?
எனக்கு தாய்மொழியான மலையாளம் தான் தகராறு; சரளமாக பேசுவதற்கு தடுமாறுவேன். பல ஆண்டுகளாக பெங்களூரில் வசிப்பதால், தமிழ், கன்னடம் சரளாக வரும். மலையாளம், தெலுங்கில் பேசும்போது கஷ்டமாக இருக்கும். இப்போது, நான்கு மொழிகளையுமே நன்றாக கற்று வைத்துள்ளேன். அதனால், நடிக்கும்போது பெரிய அளவில் மொழி பிரச்னை வந்தது இல்லை.
கண்கள் தானே உங்களுக்கு பிளஸ்?
என் கண்ணை பற்றி நானே எப்படி பேசுவது? நடிப்பில் மட்டும் இல்லை; சாதாரணமாக மற்றவர்களிடம் பேசும் போது கூட என் கண் பேசும்ன்னு நினைக்கிறேன். அது, இயற்கையாக அமைந்து விட்டது. நான், நானாகவே இருக்க ஆசைப்படுகிறேன். நான் ரொம்ப இயல்பாகவே இருப்பேன்.
தமிழில் அதிகமாக நடிப்பதில்லையே ஏன்?
ரொம்ப செலக்டீவான கதைகளில் தான் நடிக்கிறேன். படத்தின் கதை எனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட கதை உள்ள படங்களில் தான் நடிக்க சம்மதிக்கிறேன். இந்த விஷயத்தில், நான் எடுத்த முடிவு இதுவரை தப்பானதில்லை. நிறைய படங்களில் நடிப்பதை விட, நல்ல படங்களில் நான் இருக்க ஆசைப்படுகிறேன்.
மலையாளத்துக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்...?
தெலுங்கு, தமிழ், கன்னட படங்களில் நடிப்பதற்கு முன்பே, மலையாளத்தில் நிறைய படங்களில் நடிச்சிட்டு இருந்தேன். இப்ப அது மாறிடுச்சு; எல்லா மொழிகளிலும் நடிக்கிறேன். எந்த மொழி என பார்ப்பது இல்லை. தெலுங்கில் ஒரு படம், ஹிட்டானால், அதை தொடர்ந்து அதிகமான வாய்ப்புகள் வருகின்றன; தமிழிலும் அப்படித் தான்.