ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு அப்படிச்சொன்னால் தானே டக்கென புரியும். அதைவிட்டுவிட்டு எண்பதுகளில் கொடிகட்டிப்பறந்த அம்பிகா, ராதா சகோதரிகளின் தம்பியான சுரேஷ் நாயர் இயக்கும் படம் என்றால் புரிவது சற்று சிரமம் தானே (அடடா.. சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களின் மூலம் இருவரும் பாப்புலாராகிவிட்டதை கவனிக்காமல் போய்விட்டோமே).. இந்த சுரேஷ் நாயர் கொஞ்ச காலம் அநுபூதி, நீலத்தாமரா போன்ற வெகு சில படங்களில் நடித்தார். அடுத்ததாக 'மெடுல்லா ஓப்லகடா' படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்தார். நம்ம 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தோட ரீமேக் தான் இது.
இப்போது தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்ட சுரேஷ் நாயர், தான் உருவாக்கியிருந்த கதையின் அவுட் லைனையும் அதில் கதாநாயகியின் கேரக்டரையும் மஞ்சு வாரியாரிடம் சொல்லியிருக்கிறார். அந்த லைனில் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆனாராம் மஞ்சு வாரியர். உடனே முழுக்கதையையும் தயார் செய்துகொண்டு வருமாறும், அதற்குள் ஆஷிக் அபுவின் இயக்கத்தில் தான் நடித்துவரும் 'ராணி பத்மினி' படப்பிடிப்பு முடிவடைந்து விடுமென்றும் சுரேஷ் நாயரை உற்சாகப்படுத்தி அனுப்பியுள்ளாராம்.