பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
இந்திய சினிமாவின் டாப் மோஸ்ட் கிராபிக்ஸ் டிசைனர் ஸ்ரீனிவாஸ் மோகன். சிவாஜி, ஐ, எந்திரன், நான் ஈ படங்களுக்கு கிராபிக்ஸ் பணியாற்றியவர். தப்போது பாகுபலி படத்தில் பணியாற்றி வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
இனி வரும் காலங்களில் பிரமாண்ட படங்களே மக்களை திரையரங்கிற்கு அழைத்து வரும். அப்படிப்பட்ட பிரமாண்ட படங்களுக்கு கிராபிக்ஸ் முக்கியம். எல்லாவற்றையும் நேரடியாக படம்பிடிக்க நிறைய செலவாகும். அதையே கிராபிக்சில் செய்தால் செலவு குறையும். கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கிராபிக்ஸ் பணிகளை செய்ய தற்போது தொழில்நுட்பம் வந்து விட்டது. பாகுபலி படத்திற்கு பிறகு கிராபிக்சில் வலிமை அனைவருக்கும் தெரிய வரும். நடிகர் நடிகைகள் தவிர மற்ற அனைத்திலுமே கிராபிக்சின் பங்கு இருக்கும்.
சிறிய பட்ஜெட் படங்களில்கூட கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு கிராபிக்ஸ் பணிகள் இருக்கும். தற்போது சினிமாவில் 24 கலை பிரிவுகள் இருக்கிறது. தற்போது 25வது கலைப் பிரிவாக கிராபிக்ஸ் இணைந்துள்ளது. இனி சினிமாவில் கிராபிக்ஸ் தவிர்க்க முடியாத, பிரிக்க முடியாத அங்கமா இருக்கும். என்றார்.