'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், அட்டகத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பூர்வாங்க வேலைகள் தொடங்கி விட்டன. ரஜினி -பா.ரஞ்சித் கூட்டணி என்பது பலருக்கு நம்ப முடியாத ஆச்சரியமாக இருந்தது. எதையும் பிரமாண்டமாகச் செய்யும் கலைப்புலி எஸ்.தாணு இந்த புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க விரும்பியிருக்கிறார். உலகப்புகழ் பெற்ற ரகுமான் இசை என்றால் படத்தின் வியாபார மதிப்பு பல மடங்காகும் என்று நினைத்தாராம்.
எவ்வளவோ முறை இந்த விஷயத்தை மறைமுகமாகவும் நேரடியாகவும் ரஜினியிடம் தாணு கூற ரஜினியோ, ஒரு கட்டத்தில் அவர்கள் படக்குழுவில் ஒரு யூனிட்டாகச் சேர்ந்து எல்லாமும் செய்கிறார்கள். அவர்கள் விருப்பப்படி விட்டு விடலாம். ஒரு முறை எல்லாம் மாற்றித்தான் பார்ப்போமே. இத்தோடு இதை விட்டு விடலாமே என்று கறாராகக் கூறிவிட்டாராம்.
வெற்றிகரமான முதல்நிலை தொழில்நுட்பக் கலைஞர்களை தேடித்தேடிப் பிடித்து ரஜினி படக்குழு உருவாவது வழக்கம். இப்படி படக்குழுவை இவ்வளவு சுதந்திரமாக இயங்க வைத்திருப்பதை ரஜினியிடம் ஏற்பட்டுள்ள மன மாற்றமாகவே பேசிக் கொள்கிறார்கள்.