'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ள இன்று நேற்று நாளை படம், கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளனர். தமிழ்நாடு முழவதும் 150 தியேட்டர்களில் வெளியான இந்தப் படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் மட்டும் 3 கோடி வசூலித்துள்ளது. குறைந்த தியேட்டர்களில் வெளியாகி அதிக வசூலை குவித்த படங்களில் இது முதலிடத்தை பிடித்துள்ளது. தற்போது தியேட்டர்கள் அதிகப்பபடுத்தப்பட்டு வருகிறது. படத்தை வெளியிட்ட அபி அண்ட் அபி நிறுவனம்.. இதுவரை 50 தியேட்டர்களை அதிகப்படுத்தியுள்ளது.
இன்று நேற்று நாளைக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அதன் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருக்கிறது. முதல் பாகம் தயாராகும்போதே இயக்குனர் ரவிகுமார் அதன் இரண்டாம் பாக கதையையும் முடிவு செய்து விட்டார். 2065ம் ஆண்டு விஞ்ஞானி ஆர்யா மீண்டும் டைம் மிஷினை 2015க்கு அனுப்புகிறார் என்பதிலிருந்து இரண்டாம் பாக கதை தொடங்குகிறது. இரண்டாம் பாகத்தில் முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதற்கான முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளிவரும் என்று தெரிகிறது.