ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆதித்யா சேனலில் ஒளிபரப்பான டாடி எனக்கொரு டவுட்டு நிகழ்ச்சி முற்று பெற்றுவிட்டதால், அதையடுத்து அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற திண்டுக்கல் சரவணன் பர்ஹர் டு பழைய சோறு என்றொரு நிகழ்ச்சியை வழங்குகிறார். அதேபோல் அதே நிகழ்ச்சியில்இடம் பெற்ற டவுட்டு செந்தில் புதுசு கண்ணா புதுசு என்றொரு புதுமையான நிகழ்ச்சியை வழங்குகிறார்.
இதுபற்றி டவுட்டு செந்தில் கூறுகையில், டாடி எனக்கொரு டவுட்டுக்கு பிறகு அடுத்த நிகழ்ச்சிக்காக 3 ஸ்கிரிப்ட்ட சேனல்ல கொடுத்தேன். அதுல ஒரு புரோகிராம ஓகே பண்ணியிருக்காங்க. முந்திய நிகழ்ச்சியை பண்ணின மாதிரி நானும், திண்டுக்கல சரவணனும் மீண்டும் சேர்ந்து பண்ணினா, பழைய புரோக்கிராமையே நினைவுபடுத்துற மாதிரி இருக்கும் என்பதால் ரெண்டு பேருமே வெவ்வேறு நிகழ்ச்சி பண்றோம்.
நான் புதுசு கண்ணா புதுசு என்ற பெயரில் முற்றிலும் புதுமையான ஒரு நிகழ்ச்சி பண்றேன். அதுக்கான படப்பிடிப்பு நடந்து எடிட்டிங் வேலைகள் போய்க்கிட்டிருக்கு ஜூலை மாதத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி ஆதித்யா சேனல்ல ஒளிபரப்பாகும்.
இந்த நிகழ்ச்சி பொதுமக்களை சந்தித்து கேள்வி கேட்பதுதான். அதாவது. கார் என்பதற்கு கார் என்று ஏற்கனவே பெயர் வைத்து விட்டனர். ஆனால் இப்போது நீங்கள் அதற்கு ஒரு பெயர் வைப்பதாக இருந்தால் என்ன பெயர் வைப்பீர்கள்?என்று பொதுமக்களிடம் கேட்பேன். அதற்கு அவர்கள் ஏதாவது ஒரு பதில் சொல்வார்கள். கல்லூரி, பள்ளி, குடும்பம் என அனைவரையும் சந்தித்து கேட்பேன்.