ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒட்டுமொத்த இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ஓர் சரித்திர காவியம் பாகுபலி. எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் என ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மாநிலங்களில் பிரமாண்டமாய் உருவாகியிருக்கும் இப்படம் அடுத்தமாதம் ஜூலை 10ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலருக்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழில் இப்படத்தை ஞானவேல்ராஜா வெளியிடுகிறார். அதேப்போன்று இந்தியில் இப்படத்தை பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் வெளியிட இருக்கிறார். படத்தின் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியிருப்பவர், பாகுபலி படத்தை பாலிவுட்டின் ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் போட்டு காட்ட எண்ணியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தற்போது அவர் செய்து வருகிறார். மேலும் அனைத்து பிரபலங்களையும் நேரில் சென்று படத்தை காண வரும்படி கேட்டு வருகிறார். பாலிவுட் பிரபலங்களுக்கு, பாகுபலி படத்தின் ஸ்பெஷல் காட்சியை ஜூலை 8ம் தேதி திரையிட இருக்கிறார் கரண் ஜோகர்.