தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உணர்வுபூர்வமான சூழ்நிலையிலான சண்டைக்காட்சிகள் கொண்ட படங்களையே நான் இயக்க விரும்புகிறேன். முட்டாள்தனமான சண்டைக்காட்சிகள் எனக்கு எப்போதும் பிடிக்காது என்று முன்னணி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி கூறியுள்ளார்.
பாகுபலி படத்தின் மூலம், இந்திய சினிமாவை, வெகுவிரைவில் உலக தரத்திற்கு கொண்டு செல்ல உள்ள இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி, அப்பட புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்த நிலையிலும், அவருடைய அனுபவங்கள் மற்றும் அபிலாஷைகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.....
பாகுபலி படம் விரைவில் ரிலீசாக உள்ளது. எவ்வாறு உணர்கிறீர்கள்?
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய பாகுபலி படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் ரிலீசாக உள்ளது இது அளவில்லா ஆனந்தத்தை அளிக்கிறது. இது அப்படத்தின் நட்சத்திரங்களான பிரபாஸ ராஜூ, ராணா டகுபதி உள்ளிட்டோராலேயே சாத்தியாமாயிற்று. படம், 4 மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள பாகுபலி படம், ஹிந்தி மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
பாகுபலி படம் குறித்து...
பாகுபலி என்றால் வலுவான கைகள் என்று பொருள். இங்கு வலுவான கைகள் கொண்டவனின் கதையாகவே, பாகுபலி படம் உருவாகியுள்ளது. பாகுபலி கேரக்டரில், பிரபாஸ் நடித்துள்ளார். இந்த படத்தில், பிரபாஸிற்கு இரண்டு ரோல்கள். இது, பிரபாஸ் உடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம். முதலாவதாக, என் இயக்கத்திலான சத்ரபதி படத்தில் அவர் நடித்திருந்தார். பிரபாஸ் சிறந்த நடிகர். படத்தின் காட்சிகள் முதலில் தமிழில் பதிவு செய்யப்பட்டு, பின் தெலுங்கில் பதிவு செய்யப்பட்டது.
பிரபாஸ் மற்றும் ராணாவை தேர்வு செய்தது ஏன்?
நான் பிரபாஸ் மற்றும் ராணாவை தேர்வு செய்யவில்லை, படத்தின் கதை தான் அவர்களை தேர்வு செய்தது. நான் முதலில் படத்தின் கதையை தான் எழுதினேன், பின் அதனைக்கொண்டே, இந்த கேரக்டரில் யார் நடிக்கப்போவது என்பதை தீர்மானித்தேன். பிரபாஸ் மற்றும் ராணா கதையின் தேர்வேயன்றி, எனது தேர்வு அல்ல. நான் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே முடிவு செய்தேன். பிரபாஸ் மற்றும் ராணாவின் முந்தைய வெற்றி மற்றும் தோல்விப்படங்கள் இங்கு கணக்கில் கொள்ளப்படவில்லை. ராணா டகுபதி மற்றும் தமன்னாவுடன் இப்படத்தின் மூலம் முதன்முறையாக இணைந்துள்ளேன்.
இங்கு நீங்கள் எதிர்கொண்ட சவால்கள்...
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகள், விசுவல் எபெக்ட்ஸ் உள்ளிட்டவைகள் கூட எங்கள் குழுவினரால் திறம்பட உருவாக்கப்பட்டது. ஆனால், அனிமேஷன் பணிகளே, எங்களுக்கு மிகவும் சவாலாகவே இருந்தது. நமது இந்திய சினிமாவில், அனிமேஷன் நிபுணர்கள் குறைந்தளவே உள்ளனர். இருந்தபோதிலும் அதிர்ஷ்டவசமாக, எங்களுக்கு கிடைத்த அனிமேஷன் நிபுணர்கள், எங்கள் குழு நினைத்ததே, அப்படியே திரைவடிவில் அமைத்து தந்திருக்கின்றனர். அவர்களுக்கு, இந்நேரத்தில் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
படத்தின் பாடல்கள் குறித்து...
மற்ற படங்களைப் போன்று, இப்படத்திலும் பாடல்கள் உள்ளது. இதில் பாடல்கள் குறிப்பிடத்தக்கவை, ஏனெனில், ஒவ்வொரு பாடலும், கதையின் போக்கிலேயே, கதையை சொல்லுமாறு உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு பக்கபலமாக, பின்னணி இசை உள்ளது. இதுபோன்ற பின்னணி இசையை, நான் இப்போது தான் முதல்முறையாக கேட்டேன்.
எந்தமாதிரியான படங்களை இயக்க ஆசை?
எனக்கு ஆக்ஷன் படங்கள் தான் மிகுந்த விருப்பம். ஆனால், நான் தற்போது இயக்கிவரும் படங்களிலும், போதுமான ஆக்ஷன் காட்சிகளை பயன்படுத்தி வருகிறேன். சண்டை என்ற பெயரில், முட்டாள்தனமான நிகழ்வுகளை இடம்பெற நான் எப்போதுமே விரும்பியதில்லை. உணர்வுபூர்வமான சூழ்நிலையிலான சண்டைக்காட்சிகள் கொண்ட படத்தை இயக்க ஆசை.
எந்த பாலிவுட் நடிகரை இயக்க ஆசை?
எனக்கு எப்போதுமே, இந்த நடிகரை இயக்க வேண்டும், அந்த நடிகரை இயக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. இது பாலிவுட் மட்டுமல்லாது, டோலிவுட்டிற்கும் பொருந்தும். ஒவ்வொரு நடிகர்களுக்கும் தனிப்பட்ட திறமை, குணாதிசயங்கள் உள்ளன. படம் மற்றும் கதையே, என் படத்தில் நடிப்பதற்கான நடிகர்களை தேர்ந்தெடுக்கின்றன தவிர நான் அல்ல....
அமீர் கானுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு உள்ளதா?
கடந்தமுறையே, இந்த கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்டிருந்தீர்கள். நான் அப்போது துவக்கிய படம் கூட இன்னும் நிறைவடையவில்லை. நான் அப்போது எங்கிருந்தேனோ, அங்கேயே தான் இப்போதும் இருக்கிறேன். அங்கிருந்து ஒரு அடி கூட முன்னேறவில்லை. அமீர் கான் பாலிவுட் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்திற்குமான நடிகர் ஆவார். இந்திய திரையுலகில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவர் அமீர் கான். அவருடைய லகான் படம், படம் தயாரிப்பில் புது வழிமுறைகளையே உருவாக்கியது. அவர் கதைகளுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பவர். படத்தின் புரோமோஷனுக்காக, கதையில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாதவர். அவருடன், இணைந்து பணியாற்றவேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அவ்வாறு நான் நினைக்கிறேன் என்றால், அதற்குரிய தகுதிகளை நான் வளர்த்திருக்க வேண்டும். அமீர் கானிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. அவற்றை கற்றபிறகே, அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்தே நான் யோசிக்க முடியும். நான் அமீர் கானை பலநேரங்களில் சந்தித்துள்ளேன், அந்த சந்திப்புகளில் எல்லாம் கதை குறித்த விவாதங்களே நடந்ததேயன்றி, அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து சிந்திக்கவில்லை.
பாகுபலி படத்திற்கு ஏன் இரண்டு பாகம். பட்ஜெட் பிரச்னையா?
பாகுபலி படம், இரண்டு பாகமாக எடுக்க வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டது தான். இதன்காரணமாக, பட்ஜெட்டும் அதிகளவில் அதிகரித்திருந்தது. ஏனெனில், படத்தின் முதல்பாகத்தில் இருந்த செட்களே, இரண்டாம் பாகத்திலும் தொடர உள்ளன. இதன்காரணமாகவே, அந்த செட்கள், நீண்டகாலம் இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. படத்தின் இரண்டு பாகங்களையும் சேர்த்து, ரூ. 250 கோடி பட்ஜெட் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நாங்களும், ஒரேபடமாக எடுத்துவிடலாம் என்று தான் நினைத்திருந்தோம். ஆனால், அவ்வாறு நாங்கள் செய்திருந்தால், இந்த படமே படுதோல்வி அடைந்திருக்கும். இதன்காரணமாகவே, படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து வருகிறோம் என்று எஸ்.எஸ்.ராஜமெளலி கூறினார்.