டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக எடுக்கப்படும் பட்சத்தில், அதில் இந்திரா ஆக நடிக்க தான் விரும்புவதாக, நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், வி்த்யாபாலனிடம், கேள்வி கேட்கப்பட்டது, தென்னிந்திய நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்தபிறகு, உங்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. யாருடைய வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், இந்திரா கேரக்டரில் நடிக்க விரும்புவதாக அவர் கூறினார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், பெனாசிர் புட்டோவாக நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாகவும், ஆனால், அதை தான் மறுத்துவிட்டதாக வித்யா பாலன் கூறினார்.