Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

என் படத்தை பார்த்த பிறகு வன்கொடுமைகளுக்கு எதிராக பெண்கள் குரல் கொடுப்பார்கள் - வித்யாபாலன் பேட்டி!

09 ஜூன், 2015 - 14:29 IST
எழுத்தின் அளவு:
After-seeing-my-film-Women-raise-their-voice-against-the-wrong--Vidya-Balan

பாலிவுட்டின் எவர்கிரீன் நடிகையாக வலம் வருபவர் வித்யாபாலன். தி டர்ட்டி பிக்சர் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதை கவுரவி்க்கும் வகையில் தேசிய விருது பெற்றார். நடிகை இம்ரான் ஹாஸ்மியுடன் இணைந்து நடித்த படம் கஞ்சாக்கர். இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தற்போது இவர்கள் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் ஹமாரி அதுரி கஹானி. இயக்குநர் மகேஷ் பட்டின் உண்மையான வாழ்க்கை வரலாற்றை சொல்லும் விதமாக இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் குறித்தும் நடிகை வித்யாபாலன் அளித்த பேட்டி இதோ...

இப்படத்தில் நடிக்க ஓகே சொன்னது ஏன்.?


இப்படத்தின் கதையை கேட்டு நடிக்க சம்மதித்து சில நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தேன். ஒருகட்டத்தில் எனக்கு இப்படத்தில் நடிக்க பிடிக்கவில்லை. நேரடியாக மகேஷ் பட்டின் வீட்டிற்கு சென்று எனக்கு சுத்தமாக நடிக்க பிடிக்கவில்லை, எனக்கு உடல்நிலையும் சரியில்லை, ஆகையால் இந்தப்படத்தில் நான் விலகி கொள்கிறேன், என்னை மன்னித்து விடுங்கள் என்றேன். அதற்கு மகேஷ் பட், நீ இந்தப்படத்தில் நடிக்கவில்லை என்றால் நாங்கள் இந்தப்படத்தை இயக்கப்போவதில்லை, ஏனென்றால் உன்னை மனதில் வைத்தே இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால் இதில் நீ தான் நடிக்க வேண்டும். இப்போது மட்டுமல்ல இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும் சரி..., இல்லை 20 ஆண்டுகள் ஆனாலும் சரி... எப்போது நீ சரி என்கிறாயோ அப்போது இந்தப்படத்தை எடுக்கலாம், நீ இல்லாமல் இந்தப்படம் இல்லை என்றார். அவர் சொன்னதை கேட்டு என் மனதை மாற்றிக்கொண்டு மீண்டும் நடிக்க தொடங்கினேன்.


படத்தில் உங்களது கேரக்டர் பற்றி சொல்லுங்கள்.?


ஹமாரி அதுரி கஹானி படத்தில் முழுக்க முழுக்க ஒரு இந்திய பெண்ணாக, ஒரு பக்கத்து வீட்டு பெண் போன்று நடிக்கிறேன். படத்தில் எனது கேரக்டரின் பெயர் வசுந்தரா. முரட்டுதனமான கணவனின் மனைவியாக, அமைதியான பெண்ணாக நான் நடிக்கிறேன். வசுந்தராவின் கணவன், அன்பாகவும் பேசுவார், அடிக்கவும் செய்வார், அப்படிப்பட்ட கணவரை எதிர்த்து ஒருவார்த்தை கூட பேசாத பெண்ணாக நான் நடிக்கிறேன். வன்முறையிலிருந்து தனது கணவனை காப்பாற்ற போராடும் பெண் தான் நான். என் வாழ்வில் இப்படியொரு கேரக்டரை நான் பார்த்ததும் கிடையாது, நடித்ததும் கிடையாது. முற்றிலும் எனக்கு ஒரு வித்தியாசமான படம் தான் இது.


இந்தப்படம் மகேஷ்பட்டின் வாழ்க்கை பற்றிய படம் என்கிறார்களே.? உண்மை தானா!


நானும் கேள்விப்பட்டேன். நிறைய பேர் இந்தப்படம் மகேஷ்பட்டின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். ஆனால் அது உண்மை கிடையாது. பொதுவாக ஒரு மனிதனுக்கு இரண்டு விதமான அனுபவங்கள் இருக்கும். ஒன்று தன் வாழ்க்கையில் நடந்தது மற்றொன்று பிறர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பார்த்தது. இந்த இரண்டுமே ஒருவரின் தனிப்பட்ட விஷயம் தான். இந்தப்படத்திற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு படத்திலும் யாராவது ஒருவரது வாழ்க்கை சம்பந்தப்பட்டு தான் இருக்கும். ஆகையால் இப்படம் மகேஷ்பட்டின் வாழ்வில் சம்பந்தப்பட்டது தானா என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. அது அவரது வாழ்க்கை சம்பந்தப்பட்டதாக கூட இருக்கலாம் அல்லது அவர் வாழ்வில் பார்த்த அனுபவங்களாக கூட இருக்கலாம்.


இம்ரான் ஹாஸ்மியுடன், மீண்டும் நடித்தபோது என்ன மாதிரி உணர்ந்தீர்கள்.?


கஞ்சாக்கர் படம் போன்று ஹமாரி அதுரி கஹானி படம் இருக்காது. ஒவ்வொரு படமும் வெவ்வேறு விதமான கதைக்களத்தை கொண்டது. இம்ரான் ஹாஸ்மியுடன் இந்தப்படத்தை சேர்த்து நான் மூன்று படங்களில் நடித்துவிட்டேன். மிகவும் திறமையான நடிகர் அவர். எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் உண்டு. எங்களுக்குள்ளான பலம், பலவீனம் எல்லாம் நாங்கள் அறிவோம். இந்தப்படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும். ஏனென்றால் ஒரு முக்கோண காதல் கதை கொண்ட படம் இது. நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை இப்படம் தரும்.


பொதுவாக நடிகைகள் திருமணம் செய்து கொண்ட பின்னர் அவர்களது சினிமா கேரியர் முடிந்துவிடும், இதைப்பற்றி..?


இந்த கருத்தை என்னால் ஏற்க முடியாது (சிரிக்கிறார்...). என் சினிமா கேரியரை பாருங்கள், திருமணத்திற்கு பிறகும் நான் தொடர்ந்து நடித்து கொண்டு இருக்கிறேன். சினிமா துறை மட்டுமல்ல, மற்ற துறைகளிலும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு வேலை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள், ஏன் குழந்தை பெற்ற பிறகு கூட வேலை பார்க்கிறார்கள், அதேபோல் தான் சினிமாவில் இருப்பவர்களும், இதில் என்ன இருக்கிறது. மேலும் இன்றைக்கு நடிகைகள் யாரும் ஹீரோயின்களாக நடிக்க ஆசைப்படுவதில்லை, அதைக்காட்டிலும் தங்களுக்கு முக்கியத்துவமான வேடம் என்றால் அம்மா, பாட்டி போன்ற கேரக்டரிலும் கூட நடிக்க தயாராக இருக்கிறார்கள்.


இன்றைக்கும் பல பெண்கள் வீட்டில் கொடுமைக்கு ஆளாகிறார்கள்.? இதைப்பற்றி.?!


உண்மை தான். இன்றைக்கு நமது சமூகத்தில் நடக்கும் ஒரு கருணையில்லாத செயல் இது. இதுபோன்ற செயல்களை எல்லாம் படிக்காதவர்களும், கிராமத்தினரும் தான் செய்கிறார்கள் என்று நினைக்கிறோம். அங்கும் நடக்கிறது, ஆனால் கிராமத்தை காட்டிலும் நகரத்தில் தான் இது அதிகம் நடக்கிறது. அதுவும் படித்த பெண்களுக்கு இதுபோன்ற கொடுமைகள் அதிகம் நடக்கிறது. இது மாற வேண்டும் என்றால் இன்றைய இளம் தலைமுறையினருக்கு இதுபோன்ற விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும். பெண்களுக்கு என்று சுய வாழ்க்கை இருக்கிறது, அவரது வாழ்க்கையை அப்பா, சகோதரர்கள் ஏன் கணவர்கள் கூட கட்டுப்படுத்த முடியாது.


இந்தப்படம் வன்முறைக்கு எதிரான படமா.?


நிச்சயமாக இந்தப்படம் வன்முறைக்கு எதிரான படம் தான். குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்கும் படம், அவர்களை பாதுகாக்கும் வழிவகைகளை சொல்லும் படம். சமூகம் சார்ந்த பல விழிப்புணர்வுகளில் நான் பங்கேற்கிறேன். எனது விழிப்புணர்வால் மட்டும் இத்தகைய கொடுமைகளை தடுக்க முடியாது. சின்ன வயதிலேயே சிறுவர், சிறுமியருக்கு இதுபோன்ற வன்கொடுமைகளை தடுப்பது பற்றி சொல்லி கொடுக்க வேண்டும். இந்தப்படத்தை பார்த்த பிறகு பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு எதிராக நிச்சயம் குரல் கொடுப்பார்கள்.


இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in