'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நக்கல்களின் நாயகன் என பார்த்திபனை தாராளமாகக் குறிப்பிடலாம். எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அவருடைய பார்த்திபத்தனத்தை வெளிக்காட்டி விடுவார். நேற்று வெளிவந்துள்ள 'மாசு என்கிற மாசிலாமணி' படத்தில் அசிஸ்டென்ட் கமிஷனர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்த்திபன். இடைவெளிக்குப் பிறகுதான் அவருடைய காட்சிகள் வருகிறதென்றாலும் அந்த சில காட்சிகளிலேயே அவருடைய நக்கலான வசனங்களால் ரசிகர்களின் கைதட்டலை அள்ளிவிடுகிறார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு கவிதை நடையிலான கடிதத்தை அவருடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதிலும் கூட அவருடைய நக்கல், நையாண்டி அதிகம் வெளிப்பட்டுள்ளது, கூடவே ஒரு உள் அர்த்தமும் அதில் ஒளிந்திருக்கிறது. புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள், புரியாதவர்கள் புரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்...அவர் எழுதியுள்ளது இதோ...
“நட்சத்திரங்களை விட, அதைக் கடந்து அண்டமாய் பார்க்கிறேன் திரை ரசிகர்களை, நான் யாரையும் அணுகாமல் என்னை அணுகி வரும் வாய்ப்புகளை சிரம் மேற்கொண்டு திறம்பட அது ரசனையோடு வெளிப்பட முயன்று உழைத்து பயன்படுத்திக் கொள்கிறேன், அப்படி ஒரு சந்தர்ப்பமே 'மாசு'.
ஒவ்வொரு காட்சியை விளக்கும் போதும் “நான் என்றுமே ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளானவன், எனவே இன்னும் கொஞ்சம் தீனி போடுங்கள் அல்லது 'நான் வந்தும் ஒன்னும் புடுங்கலேன்னு ஒருத்தரும் சொல்லிடக்கூடாது'ன்னு ஒரு வரியாவது கோர்த்துச் சொல்லவா எனக் கேட்டு உதடுகளின் இடைவெளியில் விசிலாய் சேர்த்து விடுகிறேன். அதற்கான பலன், உலகெங்கிலும் எனக்கு வண்ணமயமாய் வந்து குவியும் பாராட்டுகள்.
அஜித், விஜய், சூர்யா அல்லது விஜய், அஜித், சூர்யா அல்லது சூர்யா, அஜித், விஜய் அல்ல நான், வந்து நின்று பேசினாலே விசில் அள்ள....என் திறமை பேசினாலே விசில் கிடைக்கும் என்பதை நன்கறிந்தவன் நான். வாய்ப்பு கடுகளவு கிடைத்தாலும் அதை 'என்'ணையில் இட்டு 'படபட'வென பாராட்டாய் தாளித்து விடுகிறேன். இப்படத்தில் நான் இருந்தேர வேண்டும் என தீர்மானித்தும் என் சுய சரக்கை அரங்கேற்ற சம்மதித்தும் ஒத்துழைத்த இயக்குனருக்கு நன்றி.
'மேல பார்த்தால் ஆன்டனா தான் தெரியும், அந்தோணியா தெரிவான்' என நான் பேச அதற்கேற்ப நடித்து ஒத்துழைத்த இனிப்பின் சுவை சூர்யாவிற்கு நன்றி. மீண்டும் முதல் வரிகள். வாக்கியம் முடிக்கும் முன்பே உதட்டில் விரல் குவித்து விசில் அடிக்கும் அநியாய புத்திசாலி ரசிகர்களின் அடிமை நான்,” என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.