தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் வருண்மணியனுக்கும் நடக்கவிருந்த திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது அனைவருக்கும் தெரிந்ததே. இது பற்றி வருண் மணியன் இதுவரை எதுவும் சொல்லாத நிலையில், த்ரிஷாவின் அம்மா திருமணம் நின்று போனதைப் பற்றி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இப்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் த்ரிஷாவும் அது பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
“திருமணம் நின்று போனது உண்மைதான். இது எதிர்பாராத ஒன்று, நம்மை மீறி ஒரு விஷயம் நடக்கும் போது, அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இப்போதைக்கு எனது கவனம் முழுவதும் நடிப்பின் மீதே இருக்கிறது. பழைய விஷயங்களைப் பற்றிப் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்றுதான் பார்க்க வேண்டும். என் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்பதை கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன். நான் கடவுளின் குழந்தை, அவர் என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார். கடவுளின் ஆசைப்படி எது நடக்கிறதோ அதை நான் ஏற்றுக் கொள்வேன்,” என்று சொல்லியிருக்கிறார்.