'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக சரத்குமார் உள்ளார். இவரது பதவிக்காலம் முடிந்து விரைவில் தேர்தல் நடக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் நடக்கும். காரணம் நடிகர் சங்கத்தில் தொடர்ந்து பதவி வகித்து வரும் சரத்குமார், ராதாரவியை வெளியேற்ற இளம் நடிகர்கள் ஒன்றாக இணைகிறார்கள். நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணியை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்ததில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக இளம் நடிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு நடிகர் விஷால் தலைமையேற்கிறார்.
வருகிற தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் சிவகுமாரும், செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு நாசரும் போட்டியிடலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் தற்போது தலைவராக உள்ள சரத்குமார் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். திருச்சியில் நடந்த சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு சென்றிருந்த சரத்குமார் இது தொடர்பாக நிருபர்களிடம் பேசும்போது "விஷாலுக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. சங்கத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது உண்மைதான். அதை பொது இடத்தில் விவாதிப்பது சரியல்ல. சங்கத்தின் தேர்தலில் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன், விஷாலும் தாராளமாக போட்டியிடலாம்" என்று கூறினார் சரத்குமார்.