துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
இந்திய சினிமாக்களில் குறிப்பிடத்தக்க ஒரு இயக்குநர் கே.பாலசந்தர். இயக்குநர் சிகரம் என போற்றப்படும் இவர் கடந்த டிசம்பர் மாதம் காலமானார். பாலசந்தரை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில், பாலசந்தர் பெயரில் அரங்கம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் பாரதிராஜா திறந்து வைத்தார். உதவி இயக்குனர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும், அவர்கள் இயக்கிய குறும்படங்களை திரையிடுவதற்காகவும், கிரீன் மேட் மற்றும் போட்டோ சூட் செய்வதற்கும் இயக்குனர்கள் சங்க கட்டிடத்தில் மினி திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ள இந்த அரங்கத்தில் முதலில் பாலசந்தரின் குறும்படம் திரையிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து பாரதிராஜாவின் வாழ்க்கை வரலாறு ்டங்கிய குறும்படம் மற்றும் உதவி இயக்குநர்களின் குறும்படங்கள் திரையிடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர் உள்ளிட்டவர்களுடன் கே.பாக்யராஜ், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்