ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபுதேவா, முரளி நடித்த 'அள்ளித் தந்த வானம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜி. அந்தப் படத்தை ஸ்ரீதர் பிரசாத் என்ற பெயரில் இயக்கியிருந்தார். அதன்பின் நீண்ட ஒரு இடைவெளிக்குப் பிறகு பிரகாஷ்ராஜ், பிருத்விராஜ், கோபிகா நடித்த 'வெள்ளித் திரை' என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கிய 'உதயநானு தாரம்' என்ற மலையாளப் படத்தின் ரீமேக். அந்த ரோஷன் ஆன்ட்ரூஸ்தான் இப்போது ஜோதிகா நடித்துள்ள '36 வயதினிலே' படத்தின் இயக்குனர். அப்போதைய பழக்கத்தில், சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்த விஜியை மீண்டும் '36 வயதினிலே' படம் மூலம் வசனகர்த்தாவாக்கியிருக்கிறார் ரோஷன்.
இப்போது விஜிக்கு '36 வயதினிலே' படத்தின் வசனம் மீண்டும் பாராட்டு மழையைப் பொழிய வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு முன்பாக விஜி வசனம் எழுதிய “பாலா, மாயாவி, அழகிய தீயே, பொன்னியின் செல்வன், மொழி, அழகிய தீயே, கௌரவம்” ஆகிய படங்களில் 'அழகிய தீயே, மொழி' ஆகிய படங்கள் அதிக பாராட்டைப் பெற்றன. அதைப் போன்று இப்போது '36 வயதினிலே' படமும் பாராட்டப்படுகிறது. அடுத்து ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தன் இயக்கத்தில் வெளிவந்த முதலிரண்டு படங்களின் தோல்வியை சரிக்கட்டும் விதத்தில் இந்தப் புதிய படத்தை இயக்கப் போகிறாராம்.