ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குநரும் தயாரிப்பாளரும் முட்டிக் கொள்வதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முதல் காரணமாக இருப்பது பிற மொழிகளுக்கான ரீமேக் ரைட்ஸ் விற்கும்போது ஏற்படும் பஞ்சாயத்துதான். கே.டி.குஞ்சமோன் - ஷங்கர் தொடங்கி பல தயாரிப்பாளர்கள் - இயக்குநர்கள் இந்த விஷயத்தில் சண்டைப்போட்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் லேட்டஸ்ட்டாக முட்டிக்கொண்டு நிற்பவர்கள்...ஜிகர்தாண்டா படத்தை தயாரித்த பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசனும், அப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜும்.
சித்தார்த், பாபி சிம்ஹா, லக்ஷ்மிமேனன் நடிப்பில் பீட்சா கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய படம் - ஜிகர்தாண்டா. மதுரைப் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் தயாரித்தார். இயக்குனருடன் இப்படத்திற்கான சம்பள அக்ரிமென்ட் போடும்போது சம்பளம் போக, ஹிந்தி பதிப்பு உரிமைவிற்கும்போது 40 சதவிகித பங்குகள் இயக்குனருக்கு சேரும் என்று குறிப்பிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தயாரிப்பாளர்.இயக்குநர் இருவருமே உண்டாகவில்லை. ஜிகர்தண்டா ரிலீஸ் நேரத்தில் தயாரிப்பாளர்.இயக்குநர் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதால், இப்போது ஜிகர்தண்டா படத்தின் ஹிந்தி உரிமையை கார்த்திக் சுப்பாராஜிடம் தெரிவிக்காமலேயே தயாரிப்பாளர் கதிரேசன் விற்க முயன்று வருகிறாராம்.
இது குறித்து சில நாட்களுக்கு முன்பு கார்த்திக் சுப்பாராஜ் பரபரப்பான குற்றம் சாட்டியிருந்தார். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும், இருவருக்கும் இடையில் சுமூக உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. கடுப்பான கார்த்திக் சுப்பாராஜ், இந்த விவகாரம் தொடர்பாக பைவ் ஸ்டார் கதிரேசன் மேல் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில் தற்போது கார்த்திக் சுப்பாராஜுக்கு சாதகமாக நீதிமன்றம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜிகர்தண்டா படத்தின் மொழிமாற்று உரிமையை விற்க ஜூன் 15, 2015 வரை தடை விதித்துள்ளது. அதோடு எஸ்.கதிரேசன் தரப்பு அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த தகவல்களை ஊடகங்களுக்கு அறிக்கையாகவே அனுப்பி இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.