மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
அறிமுக இயக்குனர் ரிதுன் சாகர் இயக்கத்தில் 'நாடோடிகள்' அபிநயா கதாநாயகியாக நடிக்கும் 'துடி' படத்தின் ஆரம்ப விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் சுமன், பிரம்மானந்தம், ரமேஷ் திலக், நளினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சுமன் கலந்து கொண்டு பேசும் போது நான் எப்போதுமே ரஜினிகாந்தை மறக்க மாட்டேன் என்றார்.
“1978ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.யு.சி. படித்துக் கொண்டிருந்த என்னை ஒரு நடிகனாக்கியவர் இயக்குனர் ராமண்ணா. நான் சினிமாவில் நடிக்கிறேன் என்று என்னுடைய அம்மாவிடம் சொன்ன போது, உனக்கு என்ன தெரியும், சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று சொல்கிறாயே எனக் கேட்டார். என்னுடைய அம்மா எத்திராஜ் கல்லூரியில் பிரின்சிபாலாக இருந்தவர். ஒரு கார் மெக்கானிக்காக இருந்த நான் நடிகராக உயர்ந்தேன். நான் படித்து வளர்ந்த இந்த தமிழ் மண் என்னை நிறையவே வாழ வைத்திருக்கிறது. அது மட்டுமல்ல இங்கிருந்துதான் பல சிறந்த நடிகர், நடிகைகள் உருவாகியிருக்கிறார்கள்.
தமிழில் நாயகனாக நடிக்க ஆரம்பித்த பின் தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமீபத்தில் ஹிந்தி வரை நடித்துவிட்டேன். இப்போது மீண்டும் என்னைத் தேடி இவ்வளவு வாய்ப்புகள் வருகிறதென்றால், அதற்கு ரஜினிகாந்த் அண்ணாதான் காரணம். அவர்தான் என்னை அழைத்து 'சிவாஜி' படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார். அதை என்றுமே மறக்க மாட்டேன். இன்றைய தலைமுறையினருக்கு என்னை அதிகம் தெரியாது, அப்படி தெரிய வைத்த படம்தான் 'சிவாஜி'. 37 வருடங்களாக இன்றும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன், அதற்கு அனைவருக்கும்,” நன்றி என்று சுமன் பேசினார்.