இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
என்னமோ ஏதோ, தலைவன் படங்களில் நடித்த நிகிஷா பட்டேல் தற்போது கரையோரம், நாரதன் படங்களில் நடித்து வருகிறார். என்னமோ ஏதோவில் ராகுல் ப்ரீத்தி சிங்கும் நடித்தார், கரையோரத்தில் இனியாவும் நடித்துக் கொண்டிருக்கிறார், நாரதனில் ஸ்ருதி ராமகிருஷ்ணனும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எத்தனை பேர் நடித்தாலும் நான்தான் படத்தின் ஹீரோயின் என்கிறார் நிகிஷா பட்டேல்.
அவர் கூறியதாவது: நான் எப்போதுமே இரண்டாவது ஹீரோயினாக நடிக்க மாட்டேன். அதில் எனக்கு விரும்பம் இல்லை. தேவையில்லாத ஈகோ பிரச்சினைகள் வரும். என்னமோ ஏதோ இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் நடித்தேன். கரையோரம் படத்தில் இனியாவும், நாரதனில் ஸ்ருதி ராமகிருஷ்ணனும் சிறிய கேரக்டரில்தான் நடிக்கிறார்கள். படத்தின் ஹீரோயின் நான்தான்.