பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், லிங்கா பட பிரச்னையில் அப்செட்டாகி இருக்கிறார். சில, பல வாரங்களுக்கு முன்னர் இப்படத்தின் பிரச்னைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு ஒரு சுமூகமான முடிவு எட்டப்பட்டது. இதனையடுத்து ரஜினி, தனது அடுத்தப்பட வேலைகளில் தீவிரமாக இறங்கினார். இந்தப்படம் ஒரு மாஸ் ஹிட்டாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் ரஜினி. அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இயக்குநர் ரஞ்சித் இப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த சூழலில் இருதினங்களுக்கு முன்னர், எங்களுக்கு இன்னும் லிங்கா நஷ்ட ஈட்டு தொகை வழங்கப்படவில்லை என விநியோகஸ்தர்கள் சிலர் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் ரஜினி மன வருத்தத்தில் இருக்கிறார்.
இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் கோவை சென்றார். கோவை மாவட்டம், ஆனகட்டி, ஆசிய வித்யா குருகுலத்தில், சுவாமி தயானந்த சரஸ்வதியை சந்தித்து பேசினார். ஏற்கனவே ஆன்மிகத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட ரஜினி, ஆன்மிகம் தொடர்பான பல விஷயங்களை அவருடன் பகிர்ந்து கொண்டார், சில விஷயங்களை கேட்டும் தெரிந்து கொண்டார். அவருடன் மதியம் உணவும் உட்கொண்டார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பி, வரும் வழியில் தனது நண்பரும், பைக்ரேஸ் வீரருமான நரேன் ராஜன், ஸ்பெயினில் நடந்த விபத்தில் காலமானார். இந்த செய்தி கேள்விப்பட்டு அவரது இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்தார். பின்னர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, ரஜினி கோவை வருவதை அறிந்து ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடிவிட்டனர்.