‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
டாப்ஸி நடித்த படம் வெளியாகி வெகு காலமாகிவிட்டநிலையில் அவரது நடிப்பில் வை ராஜா வை மற்றும் காஞ்சனா என ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளிவந்தன. இவற்றில் காஞ்சனா மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதற்கு நேர் மாறாக, வை ராஜா வை தோல்விப்படமானது. ஒரே நேரத்தில் ஒரு வெற்றிப்படத்திலும்( 'காஞ்சனா') ஒரு தோல்விப்படத்திலும்( 'வை ராஜா வை' ) நடித்த நடிகையாக டாப்ஸி இருந்தாலும் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இப்படத்திற்கு கதாநாயகியாக முதலில் புக் பண்ணப்பட்ட த்ரிஷாவை நீக்கிய பிறகு, இப்படத்தின் பைனான்ஸியரான வருண்மணியன்தான் டாப்ஸியை சிபாரிசு செய்திருக்கிறார்.
கான் என பெயர் சூட்டப்பட்டதாக சொல்லப்படும் இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். ஒருவர் டாப்ஸி! இன்னொருவர் கேத்ரின் தெரசா. சமீபத்தில் படப்பிடிப்பு துவங்கிய இப்படத்தில் டாப்ஸிக்கு போலீஸ் ஆஃபீசர் கேரக்டராம்! அதனால் நிறைய ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டி இருப்பதால் அதற்காக பிரத்தியேக பயிற்சி எடுத்து வருகிறாராம் டாப்ஸி.
கதாநாயகி டாப்ஸிக்கு போலீஸ் கேரக்டர் என்றால்... கதாநாயகன் சிம்புவுக்கு என்ன கேரக்டர்? பயந்த சுபாவமுள்ள கேரக்டராம் அவருக்கு. அது மட்டுமல்ல முருக பக்தராகவும் நடிக்கிறார். செல்வராகவன், சிம்பு முதன் முதலாக கூட்டணி அமைத்திருக்கும் இப்படம் காடுகளில் படமாக்கப்பட இருக்கிறதாம். இவரது இயக்கத்தில் வந்த ஆயிரத்தில் ஒருவன் படமும் காட்டில்தான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.