தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் விதவிதமான கதைகள் படமாக வருகின்றன. நாட்டு நடப்புகளையும், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயங்களையும் பற்றி கூட பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இயற்கையை பாதுகாக்கவேண்டும் என்கிற நோக்கில் படங்கள் எதுவும் வருகிறதா என பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தட்டுப்படவே இல்லை. மிஞ்சிப்போனால் அதைப்பற்றி டாக்குமென்ட்ரியோ அல்லது குறும்படமோ எடுத்து, அத்துடன் திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள்.
பேராண்மை, புறம்போக்கு போன்ற படங்களில் கூட இயற்கையை பாதுகாக்க வேண்டும் என லேசுபாசாகத்தான் சொல்லியிருப்பார் இயக்குனர் ஜனநாதன். ஆனால் மலையாளத்தில் முழுக்க முழுக்க இயற்கையை காக்கவேண்டியதன் அவசியத்தை பற்றி படம் ஒன்றை இயக்கப்போகிறார் இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன். உடனே இவரை ஏதோ கலைப்படம் எடுக்கிறவர் என்கிற லிஸ்ட்டில் சேர்த்துவிடவேண்டாம்.
பிருத்விராஜை ஹீரோவாக வைத்து, ஆறு கைதிகள் ஒன்று கூடி கொள்ளையடிக்க திட்டமிடும் 'சப்தமஸ்ரீ தஸ்கரா' போன்ற கமர்ஷியல் படங்களை இயக்கியவர்தான் இந்த அனில். தற்போது மலையாளத்தில் பரத்தை வைத்து 'லார்ட் லிவிங்க்ஸ்டன் 7௦௦௦ கண்டி' என்கிற படத்தை இயக்கிவரும் இவர், அதை முடித்த கையோடு இயற்கையை பற்றிய சப்ஜெக்ட்டை கையில் எடுக்க இருக்கிறாராம்.