சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் |
உதயா ராமகிருஷ்ணன் இயக்கத்தில், புதுமுகங்கள் ரோஷன்-ஐரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் வௌ்ளை உலகம். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வௌியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது, தமிழ் படத்திற்கு தமிழில் பெயர் வைப்பது இப்போதெல்லாம் ஆச்சர்யமாய் பார்க்க வேண்டி இருக்கிறது. கோர்ட் உள்ளிட்ட பல இடங்களில் ஆங்கிலம் தான் உபயோகப்படுத்தப்படுகிறது. யாரும் தமிழில் பேசுவது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் தமிழ் நாட்டிலேயே தமிழை சொல்லிக்கொடுக்க ஒரு இயக்கம் தேவைப்படுகிறது.
சினிமாவில் 10 வருடத்திற்கு ஒருமுறை மாற்றம் நடக்கும். அதேப்போல் சினிமா கலைஞனுக்கும் மாற்றம் தேவை. அவனிடத்தில் மாற்றம் இல்லையென்றால் அவனது வாழ்க்கை தொலைந்து போகும். ஆயுதமின்றி நடத்தப்படும் போராட்டங்கள் எல்லாம் கண்டிப்பாக ஜெயிக்கும். அதேப்போல் இந்த காதல் கதையான வௌ்ளை உலகமும் ஜெயிக்கும். இப்படத்திற்கு தமிழில் வௌ்ளை உலகம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த விழாவில் நான் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
விழாவில் பாக்யராஜ், ராதாரவி, பவர்ஸ்டார் சீனிவாசன், கேமராமேன் ரவி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற பலரும் வௌ்ளை உலகம் படத்தையும், படத்திற்கு தமிழில் பெயர் வைத்திருப்பதையும் பாராட்டி பேசினர்.