அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரபல இளம் நடிகையான ஆதா சர்மா ஷூட்டிங்கில் கலந்து கொண்டபோது விபத்தில் சிக்கி மருத்துமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது அவர் ஷூட்டிங்கின் பொது பைக்கில் இருந்து கீழே விழுந்து பஸ் ஒன்று மீது மோதியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஆதா சர்மா தனது டுவிட்டரில், நான் நலமாக இருக்கின்றேன். எனக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லை. நான் ஷூட்டிங்கில் பைக்கில் சென்றது உண்மை. ஆனால் விபத்து எதுவும் ஏற்படவில்லை. இந்த வதந்தி இதற்கு மேலும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் நான் இந்த செய்தியை கூறுகின்றேன்',என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் பாலியுட்டில் அறிமுகமாகி அதற்கு பின் பிரபல இயக்குனரான பூரி ஜெகன்நாத்தால் டோலிவுட்டில் ஹார்ட் அட்டாக் மூலம் அனைவரின் இதய துடிப்பை பதம் பார்த்தவர். அவருடைய திறமையை பார்த்த மற்றொரு பிரபல இயக்குனரான திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் சன் ஆப் சத்யமூர்த்தி படத்தில் அல்லு அர்ஜுனுடன் நடிக்க வைத்தார். அதிலும் இவர் சிறப்பாக நடித்துள்ளார். தற்போது இவர் கைவசமும் நிறைய படங்கள் உள்ளது. அவர் தற்போது கரம் படத்தில் பிரபல நடிகர் ஆதியோடு நடித்து வருகிறார். இந்த படம் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்ததாக அவர் சுப்ரமண்யம் பார் சேல் படத்தில் சாய் தரம் தேஜுடன் நடிக்கிறார்.